செஸ் விளையாட்டில் ' செக்மேட் ' என்று சொல்வது ஏன்?


கி.மு. 500-ல் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, செஸ். இருவர் விளையாடும் இதில் இருவருக்கும் ராஜா, ராணி தவிர, காலாட்படை, குதிரை, தேர், யானை என்று 16 காய்கள் இருக்கும். ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் அவரைத் தோல்வியடையச் செய்யலாம்.
இந்தியர்களிடம் இருந்து இந்த விளையாட்டை முதலில் கற்றுக்கொண்டவர்கள் பாரசீகர்கள். அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்றனர். ஸ்பெயினை கைப்பற்றிய அரேபியர்கள், இவ்விளையாட்டை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர். அரசர் என்பதற்கான பாரசீகச் சொல், `ஷா’. அரேபிய `ஷாமட்’ என்பதில் இருந்து `செக்மேட்’ என்ற வார்த்தை தோன்றியது. அதன் அர்த்தம், `அரசன் இறந்துவிட்டான்’ என்பதாகும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget