ரெட்டைத் தெரு திரை விமர்சனம்

கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழர்களுக்கு, இன்றைக்கு கொண்டாட்டம் என்பதன் அர்த்தம் சரியாக தெரியாது. பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கும் அவர்களுக்கு உணர்வுபூர்வமான அர்த்தம் தெரிவதே இல்லை. குறிப்பாக, மண்ணுடன் கலந்த நமது விழாக்கள், பண்டிகைகள் அர்த்தமின்றி அவர்களிடத்தில் சுருங்கிவிட்டன. ஏன், எதற்கு என்று எந்தக் காரணமும் தெரியாமல் பல்வேறு சடங்குகளை இன்றைக்கும் நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். பண்டிகைகளும் அதுபோல் அர்த்தமிழந்து சடங்குகளாக மாறிவருகின்றன.