ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 3


கற்றல்

*  தற்போது ஆரம்பக் பள்லிகளில் செயல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகிறது.

*  கற்றல் என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம்
எற்படக்கூடிய ஒரளவு நிலையான நடத்தை மாற்றத்தைக் குறிப்பதாகும்.


*  கற்றல் என்பது நமது அனுபவங்களில் இருந்து நாம் பெறும் படிப்பினை அல்லது விளைபயன்கள் ஆகும்.

*  மனிதன் ஒரு சமூக விலங்கு(அரிஸ்டாட்டில்), மனிதன் தனியே வாழ முடியாது. பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. எனவே குழந்தைகளுக்கு கூடி வாழக் கற்பிப்பது அவசியம்.

*  பள்ளியில் கல்வி என்பது 1.அறிவு பெறக் கற்றல் 2.செயல்களைச் செய்யக் கற்றல் 3. வாழக் கற்றல் 4. நல்ல மனிதனாக இருக்கக் கற்றல் ஆகிய நான்கும் கற்றல் திறன்களையும் வளர்க்க வழி வகை செய்ய வேண்டுமென யுனெஸ்கோவின் டெலார்ஸ்(1996) அறிக்கை வலியுறுத்துகிறது.

*  குழந்தைகள் நமது வாழ்க்கையைப் பூர்த்தி செய்யப் பிறப்பதில்லை அவர்களது வாழ்க்கையைப் பூர்த்தி செய்யவே பிறந்திருக்கிறார்கள்- வில்லியம் மார்டின்.

*  ஸ்கீமாக்கள் என்பவை நடத்தையாகவோ(உண்ணுதல், ஆடை அணிதல்), குறியீடுகளாகவோ(சொற்கள், எண்கள், உருவங்கள்) அல்லது மனச் செயல்பாடுகளாகவோ (கற்பனை செய்தல், கணக்குகள் செய்தல்) இருக்கலாம்.

*  காலப்போக்கில் குழந்தைகள் பெறும் அனுபவங்களின் மூலம் ஸ்கீமா ஒன்றிணைக்கப்படுதல் மற்றும் பகுக்கப்படுதல் என்னும் செயல்கள் மூலம் பல்வேறு பட்ட சிக்கலான செயல்பாடுகளாக மாறுகின்றன.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget