தீயா வேலை செய்யும் சமந்தா

நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதால் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார். 

தற்போது தெலுங்கிலும் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தாவை சில கோலிவுட் இயக்குனர்கள் இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன்
ஜோடி சேர அழைத்தபோது, ஏற்கனவே மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி வெளியேறிய நான், அடுத்து மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்பு என்றால் மட்டுமே வருவேன் என்று அந்த படங்களை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் இதற்காகதான் இத்தனை நாளும் காத்திருந்தேன் என்பது போல் உடனே அப்படத்தில் கமிட்டானார் சமந்தா. ஆனால், கெளதம்மேனனின் படத்தில் ஏற்பட்ட கதை குழப்பம் போன்று லிங்குசாமி இயக்கும் படத்தின் கதையும், சீமான் இயக்கயிருக்கும் பகலவன் படத்தில் கதை என்று சர்ச்சைகள் எழுந்ததால், அந்த படம் உடனடியாக தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியானது.

ஆனால், இப்போது அப்படத்தை ஆகஸ்ட் 21ந்தேதி அன்று கண்டிப்பாக தொடங்கயிருப்பதாக லிங்குசாமி தரப்பு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து உற்சாகமடைந்துள்ள சமந்தா, சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே அதே தேதியில் இன்னொரு தெலுங்கு படததில் நடிக்க கால்சீட் கொடுத்திருந்தபோதும் அந்த படாதிபதியிடம் பேசி சரிகட்டி, சூர்யவுடன நடிக்கும் நாளுக்காக உச்சகட்ட சந்தோசத்தில் காத்திருக்கிறாராம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget