100 மைல் தொலைவில் இருந்து எதிரிகளை தாக்கும் நவீன துப்பாக்கி: அமெரிக்கா கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கப்பற்படையில் புதிய வகை துப்பாக்கி ஒன்று சேர்க்கப்பட இருக்கிறது. இதில் இருந்து வெளிப்படும் துப்பாக்கி குண்டு ஒலியை விட எட்டு மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 20 பவுண்டு எடை கொண்ட இந்த துப்பாக்கி குண்டு சிறிய வகை ராக்கெட் போல் காணப்படுகிறது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் அமைந்துள்ள கப்பற்படை மையத்தில் இந்த துப்பாக்கி சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது அது 33 மெகா ஜூல்கள் அளவு ஆற்றலை வெளிப்படுத்தி சீறி பாய்ந்து சென்றது. (ஒரு மெகா ஜூல் என்பது ஒரு டன் எடையுள்ள கார், மணிக்கு 100 மைல் வேகத்தில் செல்வதற்கு சமம்). ஒரு சில நிமிடங்களிலேயே 100 மைல்கள் தூரம் செல்ல கூடிய இந்த ராக்கெட் மற்ற சாதாரண வகை துப்பாக்கிகளை விட அதிக துல்லியம் வாய்ந்தது. தற்போது அமெரிக்காவின் கப்பற்படையில் 13 மைல்கள் தூரம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த துப்பாக்கிகளே உள்ளன. இவ்வகை துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பின் பாதுகாப்பான இடத்தில் இருந்தே எதிரி படைகளை தாக்க இயலும். அதற்கு இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. வரும் 2025-ஆம் ஆண்டில் இருந்து 6 நிமிடங்களில் 200 மைல்கள் சென்று தாக்கும் தன்மை வாய்ந்த நவீன தொழில்நுட்பம் வாய்ந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget