இரண்டாம் உலகத்துக்கு சீக்கிரம் வருவாரா ஆர்யா?


செல்வராகவனின் கனவுப் படங்களில் ஒன்றான இரண்டாம் உலகத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நல்லபடியாக முடிந்தது. படப்பிடிப்பு தொடங்கிய வேகத்துடன் ஒப்பிட்டால் இப்போது படம் முற்றாக முடங்கிக் கிடக்கிறது.

படத்தின் முக்கியமான காட்சிகளை ஜார்‌ஜியாவில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார் செல்வராகவன். மொத்தம் அறுபது நாட்கள். இதற்காக ஜார்‌ஜியா சென்று லொகேஷன் பார்த்துத் திரும்பினார். அந்த நேரத்தில் பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதல். படப்பிடிப்பு முடங்கியது. இப்போது சேட்டை, அ‌ஜீத் படம் என ஆர்யா பிஸி. 


இந்தப் படங்களை ஓரளவு முடித்த பிறகே அவர் இரண்டாம் உலகத்துக்கு திரும்ப முடியும். அறுபது நாள் ஷெட்யூல் என்பதால் இரண்டு நாள் நடித்துவிட்டு அடுத்தப் படத்துக்கு தாவ முடியாது.


ஆக, ஆர்யாவின் சேட்டை முடிவதற்காக காத்திருக்கிறார் செல்வராகவன்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget