ஷாலினிக்கு கணவரால் தரப்பட்ட "நல்ல பரிசு" உங்களுக்கும் தெரியணுமா!


தமிழ் சினிமாவில் சில முன்னணி கதாநாயகிகள் மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவது அனவரும் அறிந்ததே. ஆனால் நடிகை ஷாலினி பிரபலமாக இருந்தபோதே நடிகர் அஜீத்குமாரை மணந்துகொண்டு வீட்டோடு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு வெளியில் அவர் தலை தெரிவதே அதிசயம். 


அஜீத்தை போன்றே வெளி உலகை அதிகம் விரும்பாத ஷாலினி எங்காவது நெருங்கிய நண்பர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அஜீத்துடன் வருவார். படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஷாலினி பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டி தொடர்ந்து விளையாடிக்கொண்டு வருவதே அதிகம் பேருக்கு தெரியாது.

சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த மாநில அளவிலான பேட்மிட்டன் தரவரிசை போட்டியில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் ஷாலினி ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது பற்றி பேட்டியளித்த ஹாலினி “ நான் பயிற்சி எடுத்துக் கொள்ள என் கணவர் எனக்கு வீட்டிலேயே பேட்மிட்டன் கோர்ட் கட்டித் தந்துள்ளார்.
மேலும் படங்கள்
எங்கள் வீட்டினுள் இருந்த பூங்கா தான் விளையாட்டுத்தளமாக மாற்றப்பட்டுள்ளது. என் வீட்டையும் கவனித்துக்கொண்டு என்னால் விளையாட்டிலும் கவனம் செலுத்த முடிகிறது. இது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த நல்ல பரிசு” என்று கூறினாராம். ஷாலினிக்கு தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு பரிசையும் தன் மகள் அனௌஷ்கா கையால் தான் பெற்றுக்கொள்கிறாராம். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்