மீண்டும் நடிக்க வரும் நடிகை சரிதா

தப்பு தாளங்கள் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சரிதா. 'தண்ணீர் தண்ணீர்', 'மவுன கீதங்கள்', 'வண்டி சக்கரம்', 'மலையூர் மம்பட்டியான்', 'அக்னி சாட்சி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். சமீப காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இவர் கடைசியாக ஜூலி கணபதி’ என்ற படத்தில் ஜெயராமோடு இணைந்து நடித்திருந்தார். தன்னுடைய கணவரான மலையாள நடிகர் முகேசையும் விவாகரத்து செய்து விட்டார்.