பாலிவுட்டில் புது அவதாரம் எடுத்த மல்லிகா ஷெராவத்

பாலிவுட்டின் குத்தாட்ட நடிகை, மல்லிகா ஷெராவத், தன் திரைப்பட வாழ்விலேயே, மிக வித்தியாசமான ஒரு வேடத்தில், தற்போது நடித்து வருகிறார்."அங்கோலி தேவி என்ற பெயரில் தயாராகும், இந்த படம், சில ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தானில் பிரபலமாக பேசப்பட்ட, பன்வாரி தேவி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது.இதுவரை நடித்த படங்களில், அரை குறை உடையுடன் ஆட்டம் போட்ட,
மல்லிகா ஷெராவத், இந்த படம் முழுவதும், புடவை அணிந்து தான் நடிக்கிறார். 

இது அவருக்கு, புது அனுபவமாக இருக்கிறதாம். அவர் கூறுகையில்," இந்த படத்தில், நான் நடிப்பதாக செய்திகள் வெளியானதும், ஏராளமான மிரட்டல்கள் வந்தன. ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். படம் முழுவதும், புடவை அணிந்து நடிப்பது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக உள்ளது. புடவை, எனக்கு, வசதியான உடையாக தெரியவில்லை என்கிறார், மல்லிகா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget