கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி வரும் வாந்தியை தடுப்பது எப்படி


பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு ஆரம்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலம் முழுவதும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஏன் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும், மயக்கம், சோர்வு, வாந்தி, குமட்டல் போன்ற உணவுகள் வரும். இதற்காக மருத்துவரிடம் சென்றாலும், பலனில்லை. அவர்களால் கூட இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடும் அனைத்தும் வாந்தி எடுக்கும் போது வெளியே வந்தால், நிச்சயம் கர்ப்பிணிகள்
மிகவும் வலுவிழந்து இருப்பார்கள். 

பின் குழந்தை பிறக்கும் போது பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே வாந்தியின் மூலம் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதை நிறுத்த, வாந்தி வருவதைத் தடுக்கும் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் சரிசெய்யலாம் அவை... 

• எலுமிச்சையை துண்டுகளாக்கி, வெயிலில் 3-4 நாட்கள் காய வைத்து, கொடி செய்து கொள்ளலாம். பின், அந்த பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம். 

• இஞ்சியின் சிறிய துண்டை சாப்பிட்டாலும், வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்தாலும் தடுக்கலாம். வேண்டுமெனில் இஞ்சி டீ போட்டு குடித்தாலும், அதனை சரிசெய்யலாம். 

• வாந்தி வந்தாலோ அல்லது வருவது போன்ற உணர்வு இருந்தாலோ, அப்போது சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாந்தி வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்தால், மயக்க உணர்வும் போய்விடும். 

• கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடிப்பது நல்ல பலனைத் தரும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget