இடி இடிக்கும் போது காமா கதிர்கள் வெளிப்படும்: கண்டறிந்தனர் நாசா ஆய்வாளர்கள்

சாதாரணமாக மின்னல் தோன்றும் போது இடி இடிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த சமயத்தில் வானில் ஆன்டிமேட்டர் துகள்கள் நிறைந்த மேகக்கூட்டம் தோன்றுவது போன்ற நிகழ்வு காணப்படுகிறது. இதனை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழக்கமான அணுக்களில் இருந்து வேறுபட்டு நெகட்டிவ் உட்கரு பகுதியும், பாசிட்டிவ் தன்மை வாய்ந்த எலெக்ட்ரான் துகள்களும் கொண்டது ஆன்டிமேட்டர் துகள்கள். இந்த துகள்கள் வானில் இடி இடிக்கும்போது மேக கூட்டம் போல் பூமியில் இருந்து வானத்தை நோக்கி செல்கிறது. அப்போது மின்புலம் தோன்றி காமாகதிர் வெளிப்பட்டு சிதறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் தங்களது பெர்மி காமா கதிர் விண்வெளி தொலைநோக்கி ஒன்றின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இதுவரை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் நிகழ்வு இடியின் உச்ச பகுதியில் இருந்தே தோன்றுவதாக கருதப்பட்டு வந்துள்ளது. கடந்த 2008&ஆம் ஆண்டில் இருந்து தொலைநோக்கி உதவியுடன் இந்த காமா கதிர் வெளிப்படும் நிகழ்வினை கவனித்து வந்துள்ளனர். அதில் இதுவரை 130 முறை இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது என தகவல் தெரியவந்துள்ளது. வழக்கமாக தினமும் உலகம் முழுவதிலும் 500 முறை கூட இந்த காமா கதிர் நிகழ்வு ஏற்படும். இந்த கண்டுபிடிப்பினால் தற்போது ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் தன்மை வாய்ந்த ஒரு புது உலகம் நம்மை சுற்றி காணப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் தற்போது தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget