இந்தியாவை கலக்க விரைவில் வரும் ஈவில் டெட்


கடந்த, 1981ல், வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, நடு நடுங்க வைத்த,"தி ஈவிள் டெட் படத்தை, இந்திய ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பல்கலை மாணவர்கள் ஐந்து பேர், விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்காக, மலைப் பிரதேசத்துக்கு செல்கின்றனர். அங்கு, சில அமானுஷ்ய சக்திகளால், அவர்களுக்கு ஏற்படும்
பாதிப்பை, படம் பார்க்கும் ரசிகர்களின் இதய துடிப்பு, எகிறும் வகையில், அந்த படத்தில் காட்சிகளாக எடுத்திருப்பர். இதற்கு பின், இதன் தொடர்ச்சியாக, மூன்று படங்கள் வந்தன. தற்போது, நான்காவதாக, இந்த படம் வந்துள்ளது. இதை, "தி ஈவில் டெட் படத்தின் ரீ-மேக் என்றும் கூறலாம். தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை, இந்த படத்தில் புகுத்தியிருப்பதன் மூலம், ரசிகர்களை, மேலும் மிரட்டியுள்ளனர். ஹாலிவுட்டில், ஏற்கனவே இந்த படம் வெளியாகி, வசூலை வாரி குவித்துள்ளது. இந்தியாவில், விரைவில் வெளியாகவுள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget