ஏடாகூடமாக கண்டிசன் போடும் மகாலட்சுமி நடிகை


ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நதியா. திருமணத்துக்குப் பிறகும் அவர் இளமையாக இருந்ததால், அந்த படத்தில் ஜெயம்ரவிக்கு அக்கா மாதிரியே இருந்தார். இருப்பினும் சுந்தர்.சி நாயகனாக நடித்த சண்ட படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனபோதும் திருமணத்துக்கு முன்பு கண்டிசன் போட்டு நடித்தது போலவே இப்போதும் என்னை எந்த நடிகரும் தொட்டு நடிக்கவோ, உரசி நடிக்கவோ கூடாது
என்றெல்லாம் ஏகத்துக்கு கண்டிசன் போட்டார். அதனால், ஒரு காட்சியில் கதைப்படி சுந்தர்.சியின் அத்தையாக நடித்த அவரை சுந்தர்.சி தூக்கிச்செல்வது போன்ற காட்சியில்கூட தன்னை யாரும் தொட்டு தூக்கக்கூடாது என்று தடை போட்டு விட்டார். அதனால், அந்த காட்சியை டூப் நடிகையை வைத்து படமாக்கினார்கள்.

இப்படி ரீ-என்ட்ரி ஆனபோதும் ஏடாகூடமாக நதியா கண்டிசன் போட்டதினால் அதன்பிறகு அவரை எந்த இயக்குனர்களும் ஏறெடுத்துக்கூட பார்க்கவிலலை. அதனால் தமிழில் பட வாய்ப்பில்லாமல் மலையாளத்துக்கு சென்று ஓரிரு படங்களில் நடித்த நதியா, இப்போது தெலுங்கில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பவர், மளிகை கடைக்கு பில் போடுவதைப்போன்று ஒரு பெரிய கண்டிசன் பேப்பரையே தூக்கிப்போட்டாராம. இருப்பினும், அவசரத்துக்கு அம்மா நடிகை கிடைக்காததால் நதியாவின் கண்டிசன்களுக்கு உட்பட்டு அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்களாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget