கோடையில் வரும் கண்வலி!


கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்துவிடும் தொற்று நோய்கள். அதில் முக்கியமானது… அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி.
நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப்பாலை ஊற்றுவது, எண்ணை ஊற்றுவது என்று ஏடாகூடாமாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது.
இதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். இவைகளை மருத்துவர்கள் சரியாக கண்டுபிடித்து மருந்துகளை கொடுப்பார்கள். ஆனால் நாம் பொதுவாக ஏதாவது ஒரு மருந்தை ஊற்றி விடுவோம். இதனால் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படும்.
கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள்.
இவர்களுக்கு கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget