மொபைல் மூலம் கணினியில் இன்டர்நெட் இணைப்பை உருவாக்குவது எப்படி!


மொபைலில் உள்ள இன்டர்நெட் கனக்ஷனை கம்ப்யூட்டரில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இதற்கு மொபைலில் உள்ள ஜிபிஆர்எஸ் கனக்ஷன் போதுமானது. இப்போது மொபைலில் இருக்கும் ஜிபிஆர்எஸ் வசதியை, கம்ப்யூட்டரில் பன்படுத்தும் வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  • உதாரணத்திற்கு நோக்கியா மொபைலை உபயோகிக்கிறோம் என்று வைத்து கொள்ளலாம். முதலில் நோக்கியா பிசி சூட் என்ற சாஃப்ட்வேரை கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு மொபைலின் யூஎஸ்பி கேபிளை, கம்ப்யூட்டருடன் இணைத்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்திருந்த நோக்கியா பிசி சூட் சாஃப்ட்வேரை க்ளிக் செய்து திறக்க வேண்டும்.
  • சாஃப்ட்வேரை க்ளிக் செய்த பின்னர், தனியே ஒரு புதிய விண்டோ திறக்கப்படும். இதில் நமது மொபைல்போனின் மாடல் நம்பர் தெரியும்.
  • அதே விண்டோவில் இன்டர்நெட் கனக்ஷன் என்ற ஐகானும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதில் இருக்கும் கனக்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த வழிமுறைகள் மூலம் சிறப்பான வசதியினை எளிதாக மொபைலில் இருக்கும் ஜிபிஆர்எஸ் வசதி கொண்டு, கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வசதியை பெறலாம்.
மேலே கூறப்பட்டுள்ள வழி அல்லாமல், ப்ளூடூத் மூலமும் மொபைலில் உள்ள ஜிபிஆர்எஸ் வசதியை கம்ப்யூட்டரில் இணைக்கலாம்.
இதற்கு முதலில் கம்ப்யூட்டரில் உள்ள ப்ளூடூத் வசதியை ஆன் செய்ய வேண்டும். அதே போல் மொபைலில் உள்ள ப்ளூடூத் வசதியினையும் ஆன் செய்து கொள்ள வேண்டும்.
இப்படி ப்ளூடூத் வசதியை ஆன் செய்யும் போது, அதன் கீழ் பேர்டு டிவைஸ் என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனுக்குள் சென்றால், ஏடு நியூ டிவைஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் கம்ப்யூட்டர் மாடலை சேர்க்கவேண்டும். இப்படி ப்ளூடூத் மூலமும் மொபைலில் உள்ள ஜிபிஆர்எஸ் வசதியினை இணைக்கலாம். இங்கு கூறப்பட்டுள்ள 2 வழிமுறைகளுமே மிக எளிமையானது தான்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget