நான் தேவ லோக கன்னியா - பிரியங்கா சோப்ரா


நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் இல்லை, அழகும் இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேசுகையில், நான் பரேலியில் வாழ்ந்தேன். அங்கிருந்து போஸ்டன் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நான் இனவாதப் பிரச்சனைகளை சந்தித்தேன். சில சிறுமிகள் என்னை பிரவுனி என்று அழைத்தார்கள். அமெரிக்க பள்ளியில் படித்ததில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். நம்பிக்கையுடன் செயல்பட
கற்றுக் கொண்டேன். நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் கிடையாது. அவரைப் போன்று அழகும் இல்லை. எனக்கு நடிக்கத் தெரியாமல், அழகிப் போட்டியில் வெற்றி பெறத் தெரியாமல் இருந்தது.
ஆனால் ஒவ்வொரு சூழலும் எனக்கு ஒவ்வொன்றை கற்றுக்கொடுத்தது. ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பாதி இந்தியாவுக்கு ஆட்டிஸம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் நான் பர்பி படத்தில் ஆட்டிஸம் பாதித்தவளாக நடித்துள்ளேன். என்னுடைய ஆல்பம் வரும் 13ம் தேதியும், பர்பி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதில் மக்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியவில்லை என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget