
சமீபகாலமாக, மொழி தெரியாதவர்களை பின்னணி பாட வைப்பது, ஒரு பேஷனாகி விட்டது. என்ன தான், தமிழை அவர்கள் கடித்து துப்பினாலும், அது கூட ஒரு அழகு தான் என்று ரசிக்கிறது சினிமா வட்டாரம்.அந்த வகையில், புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், ஒரு குத்துப் பாடலை பாட, மும்பையில் இருந்து பாப் பாடகி ஷிபானி காஷ்யப் என்பவர் வரவழைக்கப்பட்டு, பாடலும் பதிவானது. "அரபுக்குதிரை என்ற வரிகளுடன் துவங்கும், அந்த பாடலை,
நடனமாடிக் கொண்டு, அவர் பாடிய விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது. அதனால், "பாடலுக்கு நீங்களே நடனம் ஆடினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் விருப்பம் தெரிவிக்க, உடனே ஓ.கே., சொல்லி அதிரடி ஆட்டமாடி அசத்தியுள்ளாராம் ஷிபானி.