பெண்கள் ஏன் கருக்கலைப்பு செய்ய வேண்டும் - உங்களுக்கு தெரியுமா


சில நேரங்களில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஒருசில மருத்துவ காரணங்களாலும் கருக்கலைப்பு மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனென்றால், சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாத நேரத்தில் கர்ப்பம் அடைந்தால், அதனால் தாய்க்கு பிரச்சனை தான் ஏற்படும்.
 எனவே தான் சில சமயங்களில் தாயின் உயிரைப் பாதுகாக்க, கருக்கலைப்பு செய்யப்படுகிறது. உதாரணமாக, குழந்தைக்கு ஏதேனும் தீவிர மரபணு குறைபாடுகள் இருந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே அந்த நேரத்தில் கருக்கலைப்பு அவசியம் செய்ய வேண்டும். 


  • பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அம்மை நோய் வந்தால், அந்த நேரத்தில் உடனே கருக்கலைப்பு செய்ய வேண்டும். ஏனெனில் அம்மை நோய் வந்தால், அதனை உண்டாக்கும் வைரஸானது குறைந்தது 3 மாதங்கள் உடலில் இருக்கும். இவ்வாறு அந்த வைரஸ் இருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும். 
  • கர்ப்பம் ஆனவுடன் குழந்தையின் நிலை மற்றும் செயல்பாட்டை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்போது குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு அல்லது பெருமூளையில் பிரச்சனை இருப்பது போன்று தெரிந்தால், அப்போது அந்த பிரசவத்தை தொடராமல், உடனே கருக்கலைப்பு செய்வது சிறந்தது. ஏனெனில் குழந்தை பிறந்து அவஸ்தைப்படுவதைப் பார்ப்பதை விட, அதனை கலைப்பதே சிறந்தது. 
  • கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எய்ட்ஸ் இருந்தால், அப்போது கருவில் இருக்கும் குழந்தைக்கும் இந்த நோய் வந்துவிடும். எனவே இத்தகைய நோய் இருந்தால், கருக்கலைப்பு மிகவும் அவசியம். -  தாயின் தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாமல் இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரந்தால், நிச்சயம் கருக்கலைப்பு செய்துவிட வேண்டும். 
  • புற்றுநோய் இருக்கும் போது கர்ப்பமடைந்தால், உடனே கருக்கலைப்பு செய்துவிடுவது சிறந்தது. ஏனெனில் புற்றுநோயை போக்குவதற்கு மேற்கொள்ளும் சிகிச்சையின் போது கடுமையான கெமிக்கல் உள்ள ஹீமோதெரபி மேற்கொள்வதால், அது குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஒருவேளை புற்றுநோய் சிகிச்சையை பிரசவத்திற்கு பின் மேற்கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டுவிட்டால், பின் புற்றுநோய் முற்றி, இறப்பிற்கு வழிவகுக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget