பிரியாணியை ரவுண்டு கட்டும் த்ரிஷா!


என்னதான் நடிகைகள் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவர்களால் ஆசைப்பட்ட பொருளை சாப்பிட முடியாது. எல்லாம் இருந்தும் வாயக்கட்டி வயிற்றக்கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் உடம்பு பெருத்து விடும் என்பதால், தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பதை கடைபிடித்து வருவார்கள். ஆனால், த்ரிஷா மற்ற நடிகைகள் மாதிரி உடம்பு பெருத்து விடுமே என்று கவலைப்படுவதெல்லாம் இல்லையாம்.
முக்கியமாக பிரியாணியை கண்ணில் பார்த்து விட்டால், செம கட்டு கட்டி விடுவாராம். அந்த அளவுக்கு பிரியாணி பிரியையாம் த்ரிஷா. ஆனால், அப்படி சாப்பிடுபவர், உடம்பில் கொழுப்பு சேர்ந்து விடக்கூடாதே என்பதற்காக அடுத்த சில நாட்கள் விரதமிருப்பவர், கடினமான உடற்பயிற்சியும் செய்வாராம். அதனால்தான், த்ரிஷாவின் உடல்கட்டு அவரது கண்ட்ரோலில் இருக்கிறதாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget