பெண்கள் உதடுகளை அழகாக பராமரிப்பது எப்படி

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டு மென்பது ஆசை. இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ... 

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், 'வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷன்' தடவுங்கள்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

உதடு சிவப்பாக வேண்டுமா..?

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெய்யோடு ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாவதுடன் கவர்ச்சியான சிவப்பு நிறத்தையும் பெறும்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிட்டு, குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் உதடுகளில் பூசிவர, உதடுகள் மிகவும் மென்மையாகவும், இயற்கையான சிவப்பு நிறத்துடனும் தோற்றமளிக்கும்.வறட்சியினால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் கூட இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget