கோலிவுட்டை கலக்க வரும் காதல் ஜோடிகள்

சிம்பு முதன்முதலாக காதலில் விழுந்தது நயன்தாராவிடம்தான். வல்லவன் படத்தில் நடித்தபோது இவர்களுக்கிடையே மலர்ந்த காதல், உதடு கவ்வும் அளவுக்கு ரொம்ப சீக்கிரத்திலேயே சூடுபிடித்திருந்தது. ஆனால், எவ்வளவு சீக்கிரம் வளர்ந்ததோ அவ்வளவு சீக்கிரம் அவர்களது காதல் முறிந்தும் போனது. 


ஆனால், அதன்பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதல்வயப்பட்டார் நயன்தாரா. இரண்டு வருடமாக காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்த அவர்களது காதலும் பின்னர் பொசுக்கொன்று முறிந்துவிட்டது. இதனால் சமீபகாலமாக காதல் மீதான வெறுப்பில், இனி பிரமச்சர்யம் கடைபிடிக்கப்போகிறேன் என்று கூறி வருகிறார் நயன்தாரா.

ஆனபோதும், அவருக்கு இப்போது ஆறுதலாக இருந்து வருபவர் ஆர்யாதான். பிரபுதேவாவிடமிருந்து பிரிந்து திக்குத்தெரியாமல் நயன்தாரா நின்று கொண்டிருந்தபோது அவருக்கு ஆதரவு கொடுத்து தனது வீட்டிலேயே குடியிருக்க வைத்தவர் ஆர்யாதான். அதோடு அவருக்கு ஒவ்வொரு விசயத்திலும் உறுதுணையாக இருந்து வருகிறார். இதற்கெல்லாம் மேலாக இரண்டு பேருமே கேரளாவைச்சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில், அவர்களுக்கிடையிலான அந்யோன்யத்தைப்பார்க்கும் கோலிவுட் நபர்கள், சில நாட்களுக்கு முன்புதான் சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். அடுத்து ஆர்யா-நயன்தாராவும் காதலை சொல்வார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அடித்து சொல்கின்றனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget