மகளிருக்கு கண்களில் ஏற்படும் பாதிப்புகள்

பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. கண்ணீர் வெளியேறும்போது, கண்களில் உள்ள அசுத்தமும் சேர்ந்து வெளியேறும். அழுவது மூலம் அவர்கள் அந்த சோகத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விலகி, மன அமைதியையும் பெறுவார்கள். பெண்கள் அழுவதால் அவர்களுக்கு விழித்திரையில் தண்ணீர் கோர்க்கும் நோய் குறைவாக இருக்கிறது. 

பெண்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் ‘சி. எஸ்.ஆர்’ பாதிப்பு ஏற்படக்கூடும். மாதவிலக்கு நிலைத்துபோகும் ‘மனோபாஸ்’ காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் தோன்றும். 

அப்போது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை இருந்தால் கண்பார்வையும் பாதிக்கப்படும். ரெட்டினாவும் ஏற்படலாம். அதனால் பெண்கள் 40 வயதுக்கு பிறகு கண் அழுத்தம், வெள்ளெழுத்து, ரெட்டினா போன்றவைகளுக்கான பரிசோதனைகளை ஒவ்வொரு வருடமும் செய்துகொள்ளவேண்டும். 

கம்ப்யூட்டரில் வேலைபார்ப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற பாதிப்பு இப்போது அதிகம் ஏற்படுகிறது. கம்ப்யூட்டரை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பதால் சுரப்பிகளில் இருந்து திரவம் வெளிவரும் வழி அடைபடும். அதனால் கண் உலர்ந்து, எரிச்சல், அரிப்பு ஏற்படும். 2 நிமிடம்கூட கண்களை திறக்க முடியாமல் அவதிப்படுவார்கள். 

பொதுவாகவே கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். இளைஞர்களும், இளம் பெண்களும் கம்ப்யூட்டர் பணிகளில் சேருவதற்கு முன்பே கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 

தேவைப்பட்டால் கண்ணாடி அணியவேண்டும். அல்லது காஸ்மெட்டிக் லென்ஸ்களை அணிந்து கொள்ளலாம். கர்ப்பகாலத்தில் கருவிழியில் தண்ணீர் சேர்ந்து அடர்த்தி அதிகரிக்கும். அதனால் அப்போது காண்டக்ட் லென்ஸ் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பொதுவாக ஆண், பெண்களுக்கென்று தனித்தனி கண் நோய்கள் இல்லை. 

ஆனாலும் சமையல் அறை புகை படிதல், உலர்ந்து போதல் போன்றவை பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். பிரசவகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தால் விழித்திரைக்கு பின்னால், ‘கோராய்டு’என்ற பகுதியில் பாதிப்பு ஏற்படலாம். பெரும்பாலும் பிரசவத்திற்கு பிறகு இது சரியாகிவிடும் என்றாலும், பெண்கள் இதில் கவனம் செலுத்துவது நல்லது. 

நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் கர்ப்பத்திற்கு தயாராகும் முன்பே தங்கள் கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏன்என்றால், அவர்கள் கர்ப்பிணியான பின்பு கண்பாதிப்பு அதிகமாகும். நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் எல்லா காலகட்டத்திலும் கண்நலனின் தனிக்கவனம் செலுத்தவேண்டும். 

தற்போது கண் பரிசோதனை முறைகளிலும், சிகிச்சை முறைகளிலும் நவீனங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன. கண்புரை, விழித்திரை, கருவிழி மாற்றுதல் போன்ற ஆபரேஷன்களிலும் நவீன சிகிச்சைமுறைகள் கையாளப்படுகின்றன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget