சுதந்திர தின விழாவில் வித்யா பாலன்

அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூயார்க் இந்தியன் அசோசியன் என்ற அமைப்பு சார்பில், ஆண்டு தோறும், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பிரமாண்ட விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்கள், கலர்புல் அணிவகுப்பையும் நடத்துவர். இந்த அணிவகுப்பில் இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களும் பங்கேற்பர். இந்தாண்டு நடக்கும் சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கு, பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பில், வித்யா பாலனுக்கு, கிராண்ட் மார்ஷல் என்ற அந்தஸ்தும் அளிக்கப்படவுள்ளது. 

இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில்,"நம் நாட்டின் சுதந்திர தின விழா, ஒரு சில வெளிநாடுகளில் மட்டும் தான், மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதில், அமெரிக்காவும் ஒன்று. இந்த விழாவில் பங்கேற்க, எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பெருமிதமாக உள்ளது என்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget