புதிதாக வீடு வாங்குபவர் கவனிக்க வேண்டியவை

பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின்
பத்திரம், பட்டா, மூலபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும். அந்த ஆவணங்களை வக்கீல் மூலம் ஆராய வேண்டும். 

பத்திரம் காணாமல் போய்விட்டால், அந்த வீட்டை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியிலோ அல்லது தனி நபரிடமோ கடன் பெற்றிருக்கலாம். இந்த சூழ்நிலையில், பத்திரம் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் பத்திரம் வாங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே, ஒரிஜினல் பத்திரம் இல்லை என்று கூறினால் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில், வீடு விற்பனைசெய்த பிறகு ஒரிஜினல் பத்திரம் வைத்திருப்பவர்கள் அந்த வீட்டை எளிதில் தங்களது கஸ்டடியில் எடுத்துக்கொள்ள முடியும். 

மேலும், ஒரிஜினல் பத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும்போது நகல் பத்திரம் செல்லுபடியாகாமல் போய்விடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முந்தைய ஓனர் வீடு மீது வாங்கிய கடனையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டியதாகி விடும். 

இதேபோல பத்திரத்தில் குறிப்பிடும் நீள, அகல அளவுகளில் வீட்டுமனை உள்ளதா என்பதையும் சர்வேயர் மூலம் அளப்பது நல்லது. ஏனெனில், பத்திரத்தை பொறுத்தவரை பழைய பத்திரத்தில் என்ன அளவு உள்ளதோ அதே அளவு அடுத்தவருக்கு விற்கும்போதும் எழுதப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கலாம் அல்லது உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினால் கையகப்படுத்தி இருக்கலாம். பொதுச்சுவர் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். 

சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர்வரி உள்ளிட்ட வரிகள் அனைத்தும் தவறாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்பதை விற்பவர்களை கேட்டு தெரிந்துகொண்டு, அதற்கான ஆவணத்தை பெறவேண்டும்.

குடிநீர் வசதி, எங்கு வேண்டுமானாலும் சென்று வர சிறந்த சாலை இணைப்பு, போக்குவரத்து வசதி, பள்ளிகள், கல்லூரிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி, தூய்மையான சுற்றுச்சூழல் இவையெல்லாம் பார்க்க வேண்டும்.

எப்போதுமே பில்டரின் ஒப்பந்தம் மீது 2வது நம்பிக்கை கொள்ளுங்கள்

பில்டர் ஒப்பந்தத்தின் வரைவு நகல் என்பது அனைத்து வீடு வாங்குபவர்களும் படிக்க வேண்டிய ஆவணத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்று. ஒப்பந்தம் பில்டருக்கு சாதகமாக ஒருதலை பட்ச மாக உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டி யது அவசியம். வழக்கமாக கிளப் ஹவுஸ், உட்புற சாலைகள், மொட்டைமாடி மற்றும் திறந்தவெளிகள் மேலும் சங்கம் அமைப்பது ஆகியவற்றின் பாத்யதை உரிமை மீதான தரமான அச்சுபிரதியில் எப்போதும் ஒரு சிறு தெளிவின்மை இருக்கும். வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முடிவு என்பதால் தொழில்முறை ஆலோசனை மேற்கொள் வது உதவிகரமாக அமையும். எந்த ஒரு விஷயமும் தவறாக இருக்கக்கூடாது மேலும் அது உங்கள் முழு வாழ்க்கையை வேதனைப் படுத்தும்.

வாங்கும் மனையின் சுற்றுப்புற சூழ்நிலையால் பெறும் பலன்கள்

பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். இது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஓடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும். மனைக்கு கிழக்கில் இருந்தால் தண்ணீர் தெற்கில் இருந்து வடக்காக செல்வது யோகம் தரும். மனைக்கு தெற்கு அல்லது மேற்கில் ஆறு, ஓடை இருப்பது நலம் தராது. மனைக்கு தெற்கிலோ, தென்மேற்கிலோ, மேற்கிலோ மலை குன்று இருப்பது நன்மை தரும். மனைக்கு முன் அல்லது பின்புறமாக மயானம் புதைகுழி இருப்பது மன நிம்மதி தராது.

மனைக்கு எதிராக திருக்கோயில் இருந்தால் , அங்கு குடியிருப்பவர்களது வயது வளர வளர அவர்களது செல்வமும் குறைந்துகொண்டே வரும். அவ்விதமான வீட்டை பொது உபயோகத்துக்கு உபயோகிப்பது நன்மை தரும். அதாவது நூல் நிலையம், தண்ணீர் பந்தல், பயணிகள் தங்குமிடம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றை அமைப்பது நன்மை தரும்.

மனைக்கு எதிராக சிவன் கோயில் இருந்தால் , தீராத வியாதி வரும். மனைக்கு எதிராக விஷ்ணு கோயில் இருந்தால் , மன அமைதி கெடும். துர்க்கை கோயில் இருந்தால் , உடல் நலம் பாதிக்கும். திருக்கோயில் நிழல் வீட்டின் மீது விழுவதும் தீராத துன்பங்களை தரும். திருக்கோயில் வீட்டின் வலது பக்கமாகவும், பின்புறமாகவும் இருந்தால் செல்வ இழப்பும், இடது பக்கமாக இருந்தால் முன்னேற்ற தடையும் ஏற்படும். திருக்கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றிலிருந்து 100 அடி சுற்றளவுக்கு அப்பால் இருந்தால் பாதகம் தராது.

இரண்டு பெரிய வீடுகளுக்கு நடுவில் உள்ள மனையை வாங்குவது கூடாது. அதில் வீடு கட்டினால் நாளாக நாளாக செல்வ இழப்பு ஏற்படும்.
மனைக்கு தென் கிழக் கில், தென் மேற்கில், வட மேற்கில் கிணறு போர்வெல் நீச்சல் குளம் இருந்தால் பல இன்னல்களைத்தரும். ஆனால் அவை வடக்கு, வடகிழக்கில் இருப்பது நன்மை தரும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget