கரீனாவின் திரை படத்தை பார்த்து கண்ணீர் விட்ட கரீஷ்மா!


கரீனா கபூர் நடிப்பில் வெளியாக உள்ள ஹீரோயின் திரைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் அந்த படத்தில் கரீனாவின் நடிப்பைப் பார்த்து அவருடைய சகோதரியும், நடிகையுமான கரீஸ்மா கபூர் கண் கலங்கிவிட்டாராம். ஹீரோயின்' படத்தில், சினிமா நடிகையாகவே கரீனா கபூர் நடித்திருக்கிறார். போதைக்கு அடிமையானவராக இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் பற்றி கரீனா, இந்த படம் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார். என்னுடைய முதல் விமர்ச்சகர் என்
சகோதரி கரீஸ்மாதான். அவர் இந்த படத்தை பார்த்து பத்து நிமிடத்திற்குள் கண் கலங்கிவிட்டார். அதனை என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் கரீனா.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கரீஸ்மா கபூர், ஹீரோயின் 'படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்தேன், இந்த படத்தில் கரீனான் நடிப்பு அற்புதமாக உள்ளது. அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த படம் வந்த பிறகு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்பதில் சந்தேகம் இல்லை' என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget