சினிமாவுக்கு டாட்டா காட்டும் திரிஷா


தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. திரிஷாவின் வருகைக்குப் பிறகு நயந்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா என ஹீரோயின்கள் வரிசைகட்டி வந்தாலும். தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் இன்னும் தக்கவைத்து வருகிறார். நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2002-ல் திரிஷா சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். காட்டா மீட்டா என்ற இந்திப் படத்திலும் நடித்தார். 

திரிஷா என்றால் அதில் சர்ச்சையும் அடக்கம். சிசுசிசுக்களை அதிகம் சம்பாதித்துக்கொண்டவர் திரிஷா. பார்ட்டி, பேஷன் ஷோ என திரிஷா கலந்துகொள்வதால் இவர் சில முன்னணி ஹீரோக்களை காதலிப்பதாவும் சர்ச்சைகள் கிளம்பின. திரிஷாவுக்கு நாய்கள் மிது அதிக பிரியம் உண்டு. 

சாமி, கில்லி, திருப்பாச்சி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல படங்கள் திரிஷா நடிப்பில் வந்து ஹிட்டாயின. கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்தார். தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்கள் தவிர வேறு புதுப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்த வருடத்தோடு இப்படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது. 

திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. எனவே விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் உமா தீவிரமாக உள்ளார். உறவுக்கார இளைஞரை பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget