கோழி தக்காளி சூப்

தேவையானப் பொருட்கள்:
§  தக்காளி - 4
§  கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு
§  நடுத்தரமான வெங்காயம் - அரை
§  பூண்டு - 3 பல்
§  இஞ்சி - சிறுதுண்டு
§  கொத்தமல்லித்தழை - சிறிது
§  முட்டை - 2
§  கார்ன்ஸ்டார்ச் - 2 மேசைக்கரண்டி
§  சிக்கன் ஸ்டாக் - 4 கப்
§  எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
§  தக்காளி சாஸ் - 4 மேசைக்கரண்டி
§  உப்பு - தேவையான அளவு
§  சீனி - ஒரு தேக்கரண்டி
§  மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
§  அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
§  வினிகர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
§  தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
§  கோழிக்கறியினை துண்டங்களாக்கி நான்கரை கோப்பை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக்.
§  முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன்ஸ்டார்சினை கலந்து கொள்ளவும்.
§  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.
§  பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து, தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.
§  இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.
§  பிறகு கார்ன்ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை சேர்த்து விடாது கலக்கவும்.
§  அதன் பின் வினிகரை ஊற்றவும். அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும். முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும்போது நறுக்கின கொத்தமல்லித் தழையினைத் தூவி இறக்கவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget