உயிர் தோன்றி எவ்வளவு காலமாகிறது?

பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகியிருக்க வேண்டும் என்பதற்குத் துல்லியமான கணக்கு இல்லை. என்றாலும் ஏறத்தாழ 500 கோடி ஆண்டு களுக்கு முன்னால் பூமி தோன்றியிருக்கக்கூடும் என்று அறிவியல் முறைகளைக் கொண்டு அறிஞர்கள் ஊகிக்கிறார்கள்.

பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிரினங்கள் தோன்றிஇருக்க முடியும் என்று கணித்துள்ளனர்.

அதிலும் எடுத்த எடுப்பிலேயே இன்று உள்ளது போன்ற உயிரினங்கள் தோன்றி விடவில்லை. ஏறத்தாழ நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீரில் பாசி போன்றவை தோன்றின. இம்மாதிரி தோன்றியதற்கு அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததே காரணமாகும்.

சுமார் 50 கோடி ஆண்டுகள் கடந்தபிறகுதான் உயிர்த் தோற்றங்கள் பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் போன்ற கெட்டியான கூடுகளில் அவை வசிக்க ஆரம்பிக்க, மேலும் ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகின. பின்னர்தான் படிப்படியாக முறைப் படியான உயிரினங்கள் தோன்றி வளர்ந்தன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget