வெள்ளை மாளிகையின் 'டெரர்' மிஷெல் ஒபாமா


அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மிஷெல் ஒபாமா சிம்ம சொப்பனமாக விளங்குவதாக ‘தி ஒபாமாஸ்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராக காட்சி அளிக்கிறார். அவரை மிகவும் மென்மையானவர் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்
ஆனால் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால், அவர் எங்களுக்கு எல்லாம் டெரர்ஆக இருக்கின்றார் என்கின்றனர். இந்த தகவல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடி கன்டார் எழுதி வெளியாகவுள்ள ‘தி ஒபாமாஸ்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை பெற்று, ஏ.பி. நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. அதில், மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டி படைக்கிறார் என்றும், அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சில சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.


அதிகரிகளுடன் மோதல்


வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி இம்மானுவேல், அதிபரின் முன்னாள் ஆலோசகர் ராபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவ காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது, அதற்கு எதிர்ப்பான கருத்துகள் வெளியாயின.


அந்த திட்டக் கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை என்று இம்மானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால், மனம் நொந்த இம்மானுவேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், அதை ஒபாமா ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு சமயம், ‘அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை. வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும்’ என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.


ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது, அவரிடம் மிஷெல், ‘வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாரும் சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இதனால், கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போல் பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார் நிருபர் கன்டார்.


மிகைப்படுத்தப்பட்ட செய்தி


இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்ட போது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந்நிலையில், புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாதாரணமாக நடந்த விஷயங்களை மிகைப்படுத்தியும், கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார்’ என்று தெரிவித்தார்.


நம் ஊரில் இப்படி எழுதினால் அந்த புத்தகத்தை கொளுத்துவதோடு எழுதிய ஆளையும், ஆட்டோ அனுப்பி தூக்கி துவைத்துவிடுவாங்கள்ல... !
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget