பாகவதர் வேடத்தில் கலக்க வரும் பிரேம்‌ஜி

ஒன்பதுல குரு படத்தில் நடித்த பிரேம்‌ஜி அமரன் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. சென்னை 28ல் அண்ணன் இயக்கத்தில் என்ன கொடுமை சார் இது என ர‌ஜினியின் டயலாக் பேசி பிரபலமானவர் பிரேம்‌ஜி அமரன். அடுத்தடுத்தப் படங்களில் அதே, கொடுமை டயலாக்கை ‌ரிப்பீட் செய்து ரசிகர்களை ஏகமாக கடுப்படித்தார். அண்ணன் வெங்கட்பிரபுவின் படங்களில் மட்டுமே நடிக்குமளவுக்கு சுருங்கிப் போனது இவரது உலகம்.

ஒன்பதுல குரு போன்ற கதை முதல் எதையும் பொருட்படுத்தாத படங்கள் மட்டும்தான் பிரேம்‌ஜியின் ஏ‌ரியாவாக இருந்து வருகிறது. நிலைமை முற்றிப் போய் மாங்கா என்ற படத்தில் இவரை ஹீரோவாக்கியிருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்தவர்தான் ஹீரோயின். 

மாங்காவில் தாடி மீசையில்லாமல் பாகவதர் கெட்டப்பில் தோன்றுகிறார். அத்துடன் சுருளிராஜனின் சுருட்டைமுடி கெட்டப்பும் போட்டோசெஷனில் இடம்பெற்றிருக்கிறது.

மாங்கா புளிக்காலிருந்தால் ச‌ரிதான்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget