தனுஷ் பாச மழையில் சிவகார்த்திகேயன்

தனுஷ், சிவகார்த்திகேயன் நட்புதான் இப்போது சினிமா வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனது பள்ளி நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அதன் பிறகு தனது முதல் தயாரிப்பான ‘‘எதிர்நீச்சல்’’ படத்தில் சிவகார்த்திகேயனை சோலோ
ஹீரோவாக்கினார். இதில் இவர்கள் இருவரின் நட்பும் நெருக்கமானது. திடீரென்று ஒருநாள் "சிவா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேண்டா" என்று தனுஷ்  டுவிட்டரில் போட கோலிவுட்டில் பற்றிக் கொண்டது. இதுவரை தனுஷ் தன் மனைவி குழந்தைகளை மிஸ் பண்ணுவதாக கூட டுவிட்டரில் போட்டதில்லை. சிவா மீது அப்படி என்ன பாசம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில்தான் சிவா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் தியேட்டரில் நடந்தது. அங்கு தனுசும், சிவாவும் மாறி மாறி கொட்டிய பாசத்தால் சத்தியம் தியேட்டரே சென்டிமெண்டால் உருகியது.  விழாவில் முதலில் சிவகார்த்திகேயன் இப்படி பேசினார்.

"எனது முதல் படம் மெரீனா.  டி.வி காம்பயராக இருந்த என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த பாண்டிராஜ் சாரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். மெரீனா நன்றாக ஓடினாலும் அடுத்து எனக்கு வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை. டி.வி. தொகுப்பாளன்தானப்பா அவனுக்கெல்லாம் மார்க்கெட் கிடையாதுன்னு ஒதுக்கிட்டாங்க, ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்னு இருந்திச்சு. அப்ப என்னோட பிரண்ட்சுங்க சிலபேர் ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு என்னைய வச்சு ஒரு படம் எடுக்குறதுக்காக பிளான் பண்ணிக்கிட்டிருந்தாங்க. 

அப்பதான் தனுஷ் சாரை மீட் பண்ணினேன். என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு கேட்டார். விபரத்தைச் சொன்னேன். நானே உங்கள வச்சு ஒரு படம் எடுத்து ஹீரோவா கொண்டு வந்து நிறுத்துறேன்னு அந்த ஸ்பாட்டுலேயே சொன்னார். அப்படித்தான் எதிர்நீச்சல் கிடைச்சுது. இன்னிக்கு ஹன்சிகாவோட நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் சார் படம் பண்ணப்போறேன்னா அதுக்கு காரணம் தனுஷ் சார்தான். அவருக்கும் எனக்கும் இருக்கிறது நட்புன்னு டக்குன்னு சொல்லிட முடியாது அதுக்கும் மேல... அதுக்கும் மேலன்னா... அதுக்கும்ம்ம்ம் மேல... இவ்வாறு சிவகார்த்திகேயன் உருகி உருகி பேசினார்.

அடுத்து பேச வந்த தனுஷ், சிவாகார்த்திகேயனை விட ஒரு படி மேலேயே சென்றார். அவர் பேசியது...

"சிவா என்னைப் பத்தி நிறைய பேசினார். நான் அவரை ஹீரோவாக்கினது அவரது டி.வி. ஷோ பார்த்துட்டோ, அவரது மிக்கிரிய கேட்டுட்டோ இல்ல. ஒரு அவார்ட் பங்ஷன்ல காம்பயர் பண்றப்போ அவரோ டேலண்டடை கவனிச்சேன். இவன்கிட்ட ஏதோ ஒரு பயர் இருக்கு. பெரிய இடத்துக்கு வருவான்னு அப்பவே தோணிச்சு. அப்புறம் சினிமால நடிக்க ஆரம்பிச்சப்போ சந்தோஷமா இருந்திச்சு. நாமும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமேன்னு 3 படத்துல என் பிரண்டா நடிக்க வச்சேன். அப்பதான் நான் தப்பு பண்றேன்று தோணிச்சு. ஒரு டேலண்ட் பெர்ஷன சின்னதா யூஸ் பண்றதா தோணிச்சு. அப்புறம்தான் நானே சொந்த கம்பெனி ஆரம்பிச்சு. அவரை ஹீரோவாக்கினேன்.

சிவா பேசும்போது எங்களுக்குள்ள இருக்கிறது நட்பு இல்ல அதுக்கும் மேலன்னு சொன்னார். அந்த அதுக்கும் மேலங்றது அவர் என்னோட தம்பி. எங்க குடும்பத்துல நான் நாலாவது பையன் எனக்கு மேல இரண்டு அக்கா ஒரு அண்ணன். எனக்கு ஒரு தம்பி இல்லையேங்ற குறை இருந்துச்சு அது இப்போ தீர்ந்திடுச்சு. நான் அவர்கிட்ட  அடிக்கடி சொல்வேன். ஒரு நாள் ஒரு பெரிய மேடையில முதல்ல நான் ஏறுவேன் எனக்கு கைதட்டல் விழும். அதே மேடையில எனக்கு பின்னால நீ ஏறுவ என்னைவிட அதிகமாக உனக்கு கைதட்டல் விழும். அப்படி தட்டுற முதல் கை என்னோடதா இருக்கும். அதையே இங்கும் சொல்லிக்கிறேன். நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும். சிவா மேல எனக்கு எப்படி இவ்ளோ அபெக்ஷன் வந்திச்சின்னு எனக்கே தெரியாது. ஆனா அபெக்ஷன் இருக்கு.

தனுஷ் பேசப்பேச மேடையில் இருந்த சிவகார்த்திகேயன் கண் கலங்கினார். வழிந்தோடும் கண்ணீரை அடிக்கடி துடைத்துக் கொண்டார்.

இந்த பாசமலர்கள் நீடுடி வாழ்க என்று வாழ்த்துவோம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget