விக்ரம் பிரபுவின் ‘இவன் வேற மாதிரி’ கதை தெரியுமா?

‘கும்கி’ படத்தை அடுத்து டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் விக்ரம் பிரபுவை வைத்து, ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய எம்.சரவணன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

படத்தின் கதையை பற்றி டைரக்டர் சரவணன் சொல்கிறார்:–

‘‘பொதுவாக ஒருவனை இவன் வேற மாதிரி என்றால்–எதிர்மறையாக கூறுவதற்கு மட்டுமே சொல்வார்கள். ஆனால், இந்த படத்தின் நாயகன் வேறு மாதிரி. அதாவது நல்லவன்.

எங்காவது தவறு நடந்தால், அதற்கு யாராவது ஒருவர்தான் காரணம் என்பார்கள். நமக்கு இதில் என்ன தொடர்பு, பொறுப்பு இருக்கிறது? என்று யாரும் யோசிப்பதில்லை. அப்படி யோசிப்பவன்தான், நாயகன். அதனால்தான் இவன் வேற மாதிரி.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சுரபி, டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஒரு மாதம் வசன பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. வில்லன் வம்சி, ‘தடையறத் தாக்க’ படத்தில் மிரட்டியவர். போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். இந்த நான்கு கதாபாத்திரங்களை மையமாக வைத்தே கதை பயணிக்கிறது.

சென்னை நகரை பின்னணியாக கொண்ட கதை என்பதால் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. சில காட்சிகள் மட்டும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது.’’

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget