அடுச்சான் பாருயா ஆர்டரு ஐஸ்வர்யா

இயக்குனர் அமீர் அடுத்து இயக்க இருக்கும் படம் சந்தனதேவன். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். 
இதில் முதலில் ஹீரோயினாக நடிக்க பிச்சைக்காரன் பட நாயகி சாத்னா டைட்டஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் வாங்கினார். ஆனால் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்து விட்டார்.


அடுத்ததாக அதிதி என்ற புதுமுகம் தேர்வு செய்யப்பட்டார். நெடுநல்வாடை படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் பாலியில் தொல்லை கொடுத்ததாக கூறி தற்கொலைக்கு முயன்று பரபரப்பு கிளப்பினார் அதிதி. இதனால் அதிதியும் இப்போது இல்லை. இந்த இருவரும் மிஸ்சான இடத்துக்கு வந்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். சந்தனத்தேவனில் ஆர்யா ஜோடி ஐஸ்வர்யாதான். அடுத்த மாதம் மதுரையில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக மதுரை தமிழ் பேச்சு வழக்கை கற்று வருகிறார் ஐஸ்வர்யா.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget