மாமனருக்கு அடுத்து மருமகன்!


ஆந்திராவில் தனுஷுக்கு மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி எப்போதும் இருந்ததில்லை. அதனை 3 படம் திருத்தி எழுதியிருக்கிறது. கொலவெறி பாடலால் 3 படம் உலக அளவில் பிரபலமானது. இப்படத்தின் தெலுங்கு உரிமை ஏற்கனவே மிகப்பெரிய
தொகைக்கு விற்கப்பட்டது. தற்போது ஏரியாவாரியாக விற்பனை நடந்து வருகிறது. ஆந்திராவில் உள்ள 9 ஏரியாக்களிலும் சேர்த்து இப்படம் 11 கோடி அளவுக்கு வியாபாரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினியின் சிவாஜி, எந்திரன் படங்களுக்கு அடுத்து இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு தமிழ்ப் படம் ஆந்திராவில் வியாபாரமாவது இப்போதுதான். கமல் படங்கள்கூட இந்தளவு பெரிய தொகையை ஆந்திராவில் ஈட்டியதில்லை.


தமிழ்நாட்டில் இன்னும் 3 படத்தின் விநியோகம் ஆரம்பமாகவில்லை என்பது முக்கியமானது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget