தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் ஐந்து தலைப்புகளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் என்னும் தலைப்பே தற்போது தேர்வில் அனைவருக்கும் சவாலாக உள்ள பகுதியாக உள்ளது. ஏனெனில் இத்தலைப்பில் கேட்கப்படுகின்ற வினாக்களுக்கான விடையை யூகித்து விடையளிக்க முடியாமலும், பொதுவான நடைமுறை வாழ்க்கையொடு தொடர்பில்லா பாடப்பகுதியாக இத்தலைப்புஅமைந்துள்ளதே காரணம். எனவே இப்பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை கூர்ந்து படித்து பலன்பெறவும். இவை தாள் - II அதாவது தேர்வு பி.எட் நிலையிலானது.
SNAP SHOTS
* கற்றல் - மனித நடத்தையில் ஏற்படும் மாற்றம்
* சிக்மண்ட் ப்ராய்டு - உளப்பகுப்பாய்வு கோட்பாடு, கனவுகள் ஆய்வு
* ஆல்டர் - தனிநபர் உளவியல்
* மாஸ்லோ, காரல் ரோஜர்ஸ் - மனித நேய உளவியல்
* மரபு - தன் பொற்றோர்களிடமிருந்து பெரும் உடற்கூறு மற்றும் உளக்கூறு பண்புகள்
* சூழ்நிலை - நம்மை சுற்றியுள்ள தூண்டலுக்கேற்ற தலங்கள்
* ஒரு கரு இரட்டையர் - ஒரு கரு முட்டையுடன் இரு விந்தணு கூடி கருவுறுதல்.
* மரபும், சூழலும் - மனித வளர்ச்சிக்கு முக்கியமானது.
* கவனப்பிரிவு, கவனப்பகுப்பு - ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனம் செலுத்துதல்.
* கவனமாற்றம் - நமது கவனம் ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கு தாவுதல்.