ஆடவரின் அன்பை மகளிர் எளிதாக பெறுவது எப்படி

காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். 

அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை
கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும். 

இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.  இது ஒருவர் தம் மீது அன்பு காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப்பட்டுத்திவிட்டு, பின் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இவ்வாறு விலகி செல்லும் ஆண்களை எந்த முறையை பின்பற்றி பெண்கள் அவரின் அன்பை பெற முடியும் என்பதை பார்க்கலாம். 

• பார்வையால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்களின் கண்களைத் தான் அதிகம் பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்களிடம் பேசும் போது சற்று செக்ஸியான ஒரு லுக்கை விட்டாலே போதும், ஆண்கள் ஃபிளட் ஆகி விடுவார்கள். 

• இதுவரை கண்டுகொள்ளாத காதலன் உங்களை தேடி வர வேண்டுமெனில், அவர்களை சில நாட்கள் சந்திக்க முடியாதவாறு, எப்போது பிஸியாக இருக்குமாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

• எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளியே அழைத்ததும் உடனே செல்ல வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலையில், முதலில் வேலையில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை உங்களை அலட்சியப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உணர்வதோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget