செட்டிநாடு சிக்கன்

தேவையானப் பொருட்கள்:
§  கோழிக்கறி - ஒரு கிலோ
§  பெரிய வெங்காயம் - ஒன்று
§  தக்காளி - 3
§  இஞ்சி - 3 அங்குலத் துண்டு
§  பூண்டு - 15 பல்
§  கொத்தமல்லித் தழை - சிறிது
§  கறிவேப்பிலை - 12 இலைகள்
§  தேங்காய் - அரை கப் (துருவியது)
§  எண்ணெய் - அரை கப்
§  உலர்ந்த மிளகாய் - 8
§  கசகசா - 2 தேக்கரண்டி
§  மல்லி - ஒரு தேக்கரண்டி
§  சீரகம் - அரை தேக்கரண்டி
§  ஏலக்காய் - 3
§  கிராம்பு - 2
§  பட்டை - சிறு துண்டு
§  சோம்பு - ஒரு தேக்கரண்டி
§  ஜாதிக்காய் - அரைத் துண்டு
§  மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
§  மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
§  எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
§  உப்பு - தேவையான அளவு
செய்முறை:
§ 

கோழியை நன்கு சுத்தம் செய்து கொண்டு 12 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
§  வெங்காயம் தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையைக் கழுவிக் காயவிடவும்.
§  ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காயந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
§  மீதமுள்ள எண்ணெய்யை ஒரு வாணலியில் இட்டு சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்கவும்.
§  சுமார் 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கின பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.
§  அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
§  கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget