
சர்வதேச பிராணிகள் நல அமைப்பின் (பீட்டா) விழிப்புணர்வு பிரசாரத்தில் புதிதாக இணைந்துள்ளார், "இங்கிலீஷ் விங்கிலீஷ் புகழ், ப்ரியா ஆனந்த். இதற்காக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு பிரசார படத்தில், வெள்ளை நிற உடை அணிந்து, ஒரு கையில், பறவைகள் இல்லாத வெறும் கூண்டை தூக்கி பிடித்தபடி, அட்டகாசமாக போஸ் கொடுத்தார், ப்ரியா ஆனந்த். அவரின் மற்றொரு கையில் இருக்கும் போர்டில், "பறவைகளை கூண்டில் அடைக்காதீர்கள்.
சுதந்திரமாக பறக்க விடுங்கள்என்ற, விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது. ப்ரியா ஆனந்த் கூறியதற்கு அப்புறமும், பறவைகளை கூண்டில் அடைக்க, யாருக்காவது மனது வருமா என்ன?