நான் ஹீரோக்களை மனதில் கொண்டதே இல்லை - மீரா ஜாஸ்மின்


பிரசாந்துடன் நடித்த மம்பாட்டியான் படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தை காலி பண்ணி விட்டு மலையாள படங்களில் நடித்து வந்தார் மீரா ஜாஸ்மின். கதாநாயகி அல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரை, மீண்டும் "இங்க என்ன சொல்லுது" என்ற படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த படத்தில் மீரா ஜாஸ்மினுக்கும் மீண்டும் கதாநாயகி வேடமே கிடைத்திருக்கிறது.
ஆனால், அவருக்கு ஜோடியாக நடிப்பதோ விடிவி. கணேசன் என்ற காமெடி நடிகர்.

இதுபற்றி மீரா ஜாஸ்மினைக்கேட்டால், அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதையே நகர்கிறது. அதோடு, நான் தமிழில்தான் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன் மலையாளத்தில் அப்படியல்ல. காமெடியன், வில்லன் என அனைத்து நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். காரணம், என்னைப்பொறுத்தவரை நான் ஹீரோக்களை மனதில் கொண்டதே இல்லை. எனக்குரிய கேரக்டர் பிடித்திருந்தால் நடிப்பேன். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறேன என்கிறார் மீரா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget