12 மார்., 2011

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும். அப்படிப்பட்ட பார்முலா ஒன்றைக் காப்பி செய்து வேறு ஒரு செல்லில் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த பார்முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல ஒர்க் ஷீட்கள் அமைந்த ஒர்க் புக்கில் ஒர்க்ஷீட் பெயர் உள்ள பார்முலாவினைக் காப்பி செய்கையில், எக்ஸெல் அந்த செல்களுக்கு ஏற்றவகையில்தான் மாற்றங்களை மேற்கொள்ளும். ஒர்க்ஷீட்களின் பெயர்களில் மாற்றம் செய்யாது. அதனையும் மாற்றிக் கொள்ளும் வழியை இங்கு காணலாம்.
எடுத்துக்காட்டாக, B7 செல்லில் =B6+A7 என்னும் பார்முலாவினை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இதனை D7 என்னும் செல்லுக்கு காப்பி செய்கையில், எக்ஸெல் தானாக செல் தொடர்புகளை மாற்றிக் கொள்கிறது. மேலே சொன்ன பார்முலா =D21+C22 என மாற்றப்படும். ஆனால் ஒர்க்ஷீட் பெயர் இணைந்த பார்முலாவில் இந்த மாற்றம் முழுமையாக நடைபெறாது. ஒர்க்ஷீட் பெயர் மாற்றம் இருக்காது. எடுத்துக்காட்டாக, ஒர்க்புக் ஒன்றில் January, February, மற்றும் March என மூன்று ஒர்க்ஷீட்கள் வைத்துள்ளீர்கள். பிப்ரவரி ஒர்க்ஷீட்டில் =January!B7*1.075 என்ற பார்முலாவினை அமைத்திருக்கிறீர்கள். இந்த செல் பார்முலாவினை மார்ச் ஒர்க்ஷீட்டிற்கு மாற்றுகையில், எக்ஸெல் பார்முலாவில் உள்ள செல் தொடர்பை (B7) நீங்கள் மாற்றம் செய்திடும் செல்லுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும். ஆனால் ஒர்க்ஷீட்டின் பெயர் பிப்ரவரி என மாறாது. உங்கள் ஒர்க்ஷீட்டில் ஒன்றிரண்டு ஒர்க்ஷீட்கள் இருந்தால், நீங்களாக இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். அதிக எண்ணிக்கையில் ஒர்க்ஷீட்கள் இருந்தால் அது சிரமமான வேலையாக இருக்கும். இந்த சிரமத்தைப் போக்கும் வழியைப் பார்க்கலாம்.
1. முதலில் அனைத்து பார்முலாக்களையும் தேவையான ஒர்க்ஷீட்டிற்கு, தேவைப்படும் செல்லிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது செல் பெயர்களில் எக்ஸெல் மாற்றத்தை மேற்கொண்டிருக்கும். அனைத்து காப்பி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட பின், காப்பி செய்யப்பட்ட ஒர்க்ஷீட்டிற்குச் செல்லவும்.
2. இனி Ctrl+A அழுத்தவும். இது அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கும்.
3. பின் எடிட் மெனு சென்று அதில் Replace தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இதில் Find What பாக்ஸில் January! என டைப் செய்திடவும்.

5. அடுத்து Replace With பாக்ஸில் February! என டைப் செய்திடவும்.
6. பின் Replace All என்பதில் கிளிக் செய்தால் காப்பி செய்யப்பட்ட பார்முலாக்களில் உள்ள அனைத்தும் மாற்றப்படும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் மேலே உள்ள ஸ்டெப் 4 மற்றும் 5ல் மாற்றுவது மாதங்களின் பெயரை அல்ல. பார்முலாவில் உள்ள சிறப்பு குறியீட்டுடன் உள்ள பெயரை மட்டுமே. ஏனென்றால் ஒர்க்ஷீட்டில் உள்ள மற்ற செல்களில் மாதங்களின் பெயர் இருந்தால், அவையும் இந்த மாற்றத்தில் மாற்றம் அடையும் அல்லவா!
எக்ஸெல்: பார்முலா கண்காணிப்பு
எக்ஸெல் தொகுப்பில் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்டில் பணியாற்றிய அனுபவம் பலருக்கும் உண்டு. அதில் பல்வேறு செல்களில் பார்முலாக்களைப் போட்டிருப்போம். செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில் அமைக்கும்படி ஏற்பாடு செய்திருப்போம். இதனால் புதிய பார்முலாக்கள் அமைக்கையில் அவை தொடர்புடைய செல்களில் சரியாகச் செயலாற்றி விடைகளைத் தருகிறதா என்பதைக் கண்காணிக்க பல இடங்களில் உள்ள செல்களுக்குச் சென்று பார்க்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் தவறான செல்களைப் பார்த்து தவறான தகவல்கள் மற்றும் பார்முலாக்களைத் தரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்க்க எக்ஸெல் தொகுப்பு தரும் வசதி தான் எக்ஸெல் வாட்ச் விண்டோ.
அடுத்தடுத்து எக்ஸெல் பார்முலாக்கள் கணக்கிடுவதனைக் கண்காணிக்க நமக்குக் கிடைத்திருக்கும் வசதிதான் வாட்ச் விண்டோ. நாம் செல்களின் மதிப்பை மாற்றும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட செல்களில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்று நமக்குக் காட்டும் ஜன்னல் தான் இந்த வாட்ச் விண்டோ. இதனால் நாம் ஒவ்வொரு செல்லுக்கும் தாவிச் சென்று கண்காணிக்கும் வேலை மிச்சமாகிறது. இந்த வாட்ச் விண்டோவினை அமைத்திட முதலில் Tools மெனு சென்று அதில் துணை மெனுவான Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உள்ள Show Watch Window என்பதனைக் கிளிக் செய்திட வேண்டும். Formula Auditing விண்டோவில் கண்கண்ணாடி படத்துடன் உள்ள சிறிய பிரிவுதான் Watch Window. இதனை கிளிக் செய்தவுடன் நமக்கு வாட்ச் விண்டோ கிடைக்கும். இப்போது எந்த செல்லில் உள்ள பார்முலா செயல்படுவதனைக் கவனிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து Add Watch என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது வாட்ச் விண்டோவில் பார்முலா சம்பந்தப்பட்ட செல்கள் அவற்றின் மதிப்பு, கணக்கிடப்பட்ட விடை ஆகியவை தெரியும். இதே போல எந்த பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ அவற்றை வரிசையாகத் தேர்ந்தெடுத்து Add பட்டனை அழுத்தினால் அவை அனைத்தும் Watch விண்டோவில் சேர்க்கப்படும். இந்த விண்டோனை மானிட்டரின் எந்த மூலையிலும் வைத்துக் கொள்ளலாம். இனி செல்களில் மதிப்புகளை மாற்றும் போதெல்லாம் இந்த பார்முலாக்கள் மூலம் எந்த செல்களில் மதிப்புகள் மாறுகின்றன என்று இந்த ஒரே விண்டோவில் கண்காணிக்கலாம். ஏதாவது ஒரு பார்முலா செயல்படுவதனைக் கண்காணிக்க விரும்பவில்லை என்றால் அதனை தேர்ந்தெடுத்து Delete Watch button ஐ அழுத்தி நீக்கிவிட்டு மற்ற பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு செல்லுக்காய் மவுஸ் மூலம் ஓடி ஓடிப் பார்ப்பதனைத் தவிர்த்து ஒரே ஜன்னலில் அனைத்தையும் கண்காணிப்பது எவ்வளவு எளிது பாருங்கள்.

எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்

உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மக்கள் எல்லாரும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர். எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி சக்தி உள்ளது; கொழுப்புச் சத்து எவ்வளவு, புரோட்டீன் எவ்வளவு என்று அறிய ஆசைப்படுகின்றனர். அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கங்களை வரையறை செய்திடவும் செய்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு உணவுப் பண்டங்களில் இந்த சத்துப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்று அறிய விரும்புகின்றனர்.அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு உணவினைத் தேர்ந்தெடுத்து தங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே “twofoods” என்ற இணையதளம் இயங்குகிறது. இதில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் காண விரும்பும் இரண்டு உணவுப் பொருட்களை அருகருகே அமைத்து என்டர் செய்தால், அந்த உணவுப் பொருட்களின் சத்து விகிதம் தனித்தனியே காட்டப்பட்டு ஒப்பீடு அட்டவணை கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவில் எவ்வளவு கலோரிகள், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்து உள்ளதாகக் காட்டப்படுகிறது. இதனைக் கொண்டு நாம் நம் உடல்நிலைக்கேற்ப, அல்லது டாக்டரின் ஆலோசனைக்கேற்ப உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆப்பிள்/ஆரஞ்சு, வெள்ளை / பிரவுண் அரிசி, கோதுமை/அரிசி, கேழ்வரகு /அரிசி என எந்த வகை ஒப்பீட்டிற்கும் பதில் கிடைக்கிறது. இதனைக் காண என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்

சில எளிய, அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வேறுபாடுகளை இங்கு காணலாம்.
இணைய தளங்களில் அம்சமான முறையில் நல்ல பொழுதுபோக்கினைத் தர வேண்டும் எனத் திட்ட மிடுகிறீர்களா? அப்படியானால் இணையதளத்தை வடிவமைக்கும் நீங்கள் பயன்படுத்த வேண்டியது பிளாஷ் அல்லது ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பு களைத்தான். சில இணைய தளங்கள் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுக்களை நடத்துபவர்கள் ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பை முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்டுக் கொள்வார்கள். சரி, பிளாஷ் மற்றும் ஷாக் வேவ் – இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? செயல்படும் விதத்திலா? பயன்பாட்டிலா?
இரண்டுமே:
1. முன்பு மேக்ரோமீடியா என அழைக்கப்பட்ட அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பங்களாகும்.
2. இணைய தளங்களுக்கான ப்ளக் இன் புரோகிராம்கள்.
3. வெப் பிரவுசரில் ஆக்டிவ் எக்ஸ் பயன்படுத்து கின்றன.
4. கிராபிக்ஸ், வீடியோ, அனிமேஷன்ஸ் போன்ற ஆப்ஜெக்ட்களை இணையப் பக்கங்களில் இணைக்க பயன்படுகின்றன.
இருப்பினும் இரண்டையும் சற்று உற்று நோக்கினால், சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால், இவை சற்று சாதாரணமானவை தான். இவற்றைப் பிரித்து இந்த வேறுபாடுகளைக் காணலாம்.
அடோப் பிளாஷ்:
1. அடோப் பிளாஷ் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர். பல இணைய தளங்கள் பிளாஷ் தொகுப்பை இன்ஸ்டால் செய்வதனைக் கட்டாயப்படுத்துகின்றன. டெக்ஸ்ட், கிராபிக்ஸ், வீடியோ, ஒலி ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை உண்டாக்க இது இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு உதவுகிறது. தளங்களைப் பார்வையிடுபவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையிலான வசதிகளையும் தருகிறது.
2. பிளாஷ் சார்ந்த விஷயங்கள், ஷாக்வேவ் தருவதைக்காட்டிலும் வேகமாக பிரவுசரில் தரப்படுகின்றன.
3. இணைய தளத்தைப் பார்வையிடுபவர்களிடம் ஆப்ஷன்ஸ் மற்றும் தகவல் கேட்டு அமைக்கப்படும் இன்டராக்டிவ் பக்கங்களில் பிளாஷ், பக்கங்களை வடிவமைப்பவர்களுக்கு பக்க பலமாக உதவிடுகிறது.
4. ஷாக் வேவ் தொகுப்பைக் காட்டிலும் பிளாஷ் தொகுப்பு விலை குறைவானது.
5. பிளாஷ் .SWF என்னும் பிளாஷ் பார்மட்டில் செயல்படுகிறது. “SIMPLE” Scripting Level என்பதன் ஒரு பகுதியாகும்.
அடோப் ஷாக்வேவ்:
1. 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இணைய தளங்களைப் பார்வையிடுபவர்களால் அடோப் ஷாக்வேவ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முப்பரிமாணத்தில் தரப்படும் விளையாட்டுகள், சில சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கான காட்சிப் படங்கள், ஆன்லைனில் கற்றுக் கொள்வதற்கான பாடங்களின் விளக்கப்படங்கள் ஆகியவற்றில் ஷாக்வேவ் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
2. ஷாக்வேவ் பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக புரோகிராமிங் தேவைப்படும் பிரிவுகளில் இது துணைபுரிகிறது. இதன் மூலம் ஆப்ஜெக்ட்களை சுழற்றிக் கொண்டு வரலாம்.
3.பிளாஷ் பார்மட்டைத் தன் பார்மட்டிற்குள் கொண்டு வரும் திறன் ஷாக்வேவ் தொகுப்பிற்கு உண்டு. ஆனால் பிளாஷ் தொகுப்பில் இந்த வசதி கிடையாது.
4. ஷாக்வேவ் உருவாக்க அடோப் டைரக்டர் வசதி கட்டாயம் வேண்டும். இது Advanced Scripting Language என்பதன் ஒரு பகுதியாகும்.ஷாக் வேவ் பயன்படுத்த தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.
5.ஷாக் வேவ், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும் விலை மிக அதிகம்.
6. ஷாக் வேவ் .DCR என்னும் ஷாக்வேவ் பார்மட்டினைப் பயன்படுத்துகிறது. இந்த பார்மட்டினை பிரித்துப் பார்ப்பதோ, மாற்றங்களை ஏற்படுத்துவதோ மிக கடினமான ஒரு வேலையாகும். அநேகமாக முடியாது.

ஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள். உடனே என்ன செய்வீர்கள்? அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன.
கூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம் என்ற முகவரியிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கானது என்ற முகவரியிலும், சபாரிக்கான புரோகிராம் என்ற முகவரியிலும், ஆப்பராவிற்கான புரோகிராம் என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.
தேவைப்படும் பிரவுசருக்கான ஆட் ஆன் புரோகிராமில் கிளிக் செய்து, பின் Add to Firefox என்ற பட்டனை அழுத்திவிட்டால் அதற்கான புரோகிராம் இணைந்துவிடும். பின் மீண்டும் பயர்பாக்ஸை இயக்கி, ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பார்க்கையில் ரைட் கிளிக் செய்தால் View this page in ……” என குறிப்பிட்ட அந்த பிரவுசரின் பெயர் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால்,உடன் அந்த பிரவுசர் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த தளம் அதில் காட்டப்படும்.

இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. ஒரு சிலர் இணையத் தளங்களில் இருந்து இதுபோன்ற திருட்டு நகல்களை டவுண்லோட் செய்தும், அதிலிருந்து சிடிக்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாக மைக்ரோசாப்ட் தன் ஒரிஜினல் சிடிக்களுக்கு ப்ராடக்ட் கீ ஒன்றை, 16 எண் மற்றும் எழுத்துக்கள் கொண்டதாக, வழங்கும். அதனைச் சரியாக அமைத்தால் தான், இந்த புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். ஆனால் தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்புகளுக்கு அது போன்ற ப்ராடக்ட் கீ எதுவும் இல்லாமலே இயங்கும்படி இந்த திருட்டு நகல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இது போன்ற திருட்டு நகல்கள் தயாரிக்கப்படுவது, சாப்ட்வேர் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலி யாய் இருந்து வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் தான் இது போன்ற முயற்சிகள் பெருமளவில் நடந்தேறி வருகின்றன. இந்தியாவில் 208 கோடி டாலர் அளவிற்கு இந்த திருட்டு முயற்சிகளினால் இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய விற்பனையில் வரி ஏய்ப்பும் ஏற்படுவதால் அரசுக்கு 20 கோடி டாலர் மதிப்பில் இழப்பு உண்டாகிறது.

டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, திருட்டு சாப்ட்வேர் சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர்கள் பல ஆபத்துக்களுக்கு உள்ளாவார் கள். முதலாவதாக இது சட்டப்படி தவறு. காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்து பவரைக் கைது செய்து சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கவும் முடியும் என்றார்.
மேலும் கூறுகையில் திருட்டு சாப்ட்வேர் சிடிக்களுடன் பல மால்வேர் புரோகிராம்களும் இணைந்தே தரப்பட்டு, பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்கள் மற்றவருக்குச் செல்லும் அபாயமும் என்றார். மேலும் இது போன்ற திருட்டு புரோகிராம்களை விற்பனை செய்பவர்கள், மைக்ரோசாப்ட் வெளியிட்ட சோதனைப் பதிப்புகளைக் காப்பி எடுத்து விற்பனை செய்வதாகவும், அதனால் முழுமையான பாதுகாப்பினை அவை பெற்றிருக்காது எனவும் கூறினார். மேலும் இவை ஜூன்1, 2010க்குப் பின் இயங்காது என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும் தொழில் நுட்ப ரீதியாகவும் இவற்றின் இயக்கத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் விளக்கினார். திருட்டு சிடிக்கள் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால், அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
திருட்டு சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர் ஒருவரைச் சந்தித்துக் கேட்ட போது, இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த அதிகப் பணம் செலவழித்து, ஹார்ட்வேரை மாற்றி அமைக்க வேண்டிய துள்ளது என்றும், இந்நிலையில் மேலும் அதிக பணம் கொடுக்காமல் சாப்ட்வேர் கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள் என்று கூறினார்.
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வேண்டுமானால் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்கட்டும்; நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறினார். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கேற்ப சாப்ட்வேர் தொகுப்பிற்கு விலை வைக்க வேண்டும் என அவருடைய ஆதங்கத்தினை வெளிப் படுத்தினார். இந்நிலையில் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. வெளிநாட்டி லிருந்து பேக்கேஜ்டு சாப்ட்வேராக இறக்குமதி செய்தால், இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. இதனால் அதிகார பூர்வமான விண்டோஸ் 7 சாப்ட்வேர் கிடைப்பது தாமதமாகிக் கொண்டு வருகிறது என்று கூறினார். திருட்டு சாப்ட்வேர் வாங்காதீர்கள். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படும்.

டேட்டாவினை நம் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கிறோம். எவ்வளவு பெரிய ஹார்ட் டிஸ்க்காக இருந்தாலும் ஒரு நாளில் அது பைல்களை சேவ் செய்திட பற்றாக் குறையாக உள்ளது. நீங்கள் உடனே இன்னுமொரு ஹார்ட் டிரைவை வாங்கலாம்; அல்லது புளு ரே டிஸ்க் அல்லது டிவிடிக்களில் பைல்களை சேவ் செய்திடலாம். இந்த வகையில் இப்போது வந்திருக்கும் இன்னொரு வழி ஆன்லைன் சேவிங் ஆகும். நம் டேட்டா பைல்களை பேக் அப் செய்து கொள்வதற்கு இப்போதெல்லாம் பல தளங்கள் வசதியைச் செய்து தருகின்றன. ஆன்லைனில் அண்மையில் தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. 50 ஜிபி ஸ்பேஸ் இலவசமாகத் தருவதாக அறிவித்திருந்தது. அதன் விபரங்களைப் பார்க்கையில் அவசரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. இதோ அந்த தளம் குறித்த தகவல்கள்.
இந்த தளத்தின் முகவரி

இதில் நுழைந்தவுடன் இந்த தளம் தரும் இலவச மற்றும் கட்டண சேவை விரிவாகக் காட்டப்படுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முதலில் இதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால், அதனையே யூசர் பெயராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையும் பயன்படுத்த இருக்கும் பாஸ்வேர்டையும் கொடுத்தால், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. பின் அதனைக் கிளிக் செய்து உறுதி செய்த பின், மீண்டும் ஏ–டிரைவ் தளம் சென்று, அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று பைல்களை அப்லோட் செய்வதும் மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதே போல சேவ் செய்த பைலையும், மீள எடுத்துப் பயன்படுத்தி வைக்கலாம். பேசிக், சிக்னேச்சர் மற்றும் பிரிமியம் என மூன்று வகை பைல் சேவ் வசதிகளை இந்த தளம் தருகிறது.
இங்கு சேவ் செய்திடும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்லைனில் பைல்களை வைத்தபடியே அவற்றை எடிட் செய்திடலாம்.
சிக்னேச்சர் என்ற கட்டணம் செலுத்திப் பெறும் வசதியிலும் 50 ஜிபி ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாகப் பல தொழில் நுட்ப வசதிகள் தரப்படுகின்றன. எப்.டி.பி. பைல் ட்ரான்ஸ்பர், எஸ்.எஸ்.எல். என்கிரிப்ஷன்,பைல் ரெகவரி, மற்றும் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான டெஸ்க் டாப் வசதிகள் தரப்பட்டுள்ளன.
பிரிமியம் ஸ்டோரேஜ் வசதி பெரும்பாலும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.100, 250, 500 ஜிபி மற்றும் 1 டெரா பைட் என்ற அளவில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அளவிற்கேற்றபடி கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தளம் தரும் வசதிகளில் ஆன்லைன் எடிட்டிங் வசதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இலவச ஸ்டோரேஜ் வசதி பெறுபவர்கள் கூட, ஆன்லைனிலேயே தங்கள் பைல்களை எடிட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து பின் திருத்த வேண்டியதில்லை.
பாதுகாப்பு, ரகசியம் என்ற அடிப்படையிலான பைல்களை இந்த ஆன்லைன் தள ஸ்டோரேஜ் வசதியில் வைத்திட விரும்பினால் கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறுங்கள். ஏனென்றால் இலவச ஸ்டோரேஜ் வசதியில் என்கிரிப்ஷன் வசதி தரப்படவில்லை.
அடுத்ததாக இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கான யூசர் இன்டர்பேஸ் வசதி மிக எளிமையாக இருப்பதனையும் குறிப்பிட வேண்டும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க் இடம் போதவில்லை என அங்கலாய்ப் பவர்களுக்கு இது ஒரு நல்ல போக்கிடமாகும்.

அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர்
பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.

டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன.

இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும்
புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத்தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார்.

இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள்.

1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும்.

3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும்.

4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்தது டூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும்.

அடுத்ததாக டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics): என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI) வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும்.

5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம்.

6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI) போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும்.

7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம்.

சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்?

1. கிராப் வேர்களை (crapware) நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும்.

மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும்.

அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம். லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.


நுழைவாயிலாக, ஏங்க வைக்கும் எண்ணங்களின் டிஜிட்டல் தூதனாக, எதிர்காலக் கனவுகளின் ஏணியாக, உள்ளங்கைக்குள் உலகைக் கொண்டு வரும் ஒரு எளிய சாதனமாக மாறிவிட்டது. இதன் அடுத்த பரிமாணமாக நமக்கு இன்னும் இரு மாதங்களில் கிடைக்க இருப்பதுதான் 3ஜி மொபைல் போன். வெளிநாடுகளில் பயன்பாட்டில் வந்து சில ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில், அரசின் பல்வேறு கொள்கைகளாலும், தாமதமாகிப் போன திட்டங்களாலும், தான் வருவதற்கான பாதையை இப்போதுதான் 3ஜி மொபைல் பெற்றிருக்கிறது. இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்.

மொபைல் போன் பயன்பாட்டில் மூன்றாவது தொழில் நுட்ப மேம்பாட்டினை 3ஜி என்ற சொல் குறிக்கிறது. இதில் ஜி என்பது ஆங்கிலத்தில் ஜெனரேஷன் என்ற சொல்லின் சுருக்கமாகும். தொழில் நுட்ப மேம்பாட்டில் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்பட்டு வசதிகளும் உயர்ந்த நிலைக்குச் செல்கையில் அதனை அடுத்த ஜெனரேஷன் என்று குறிப்பிடுகிறார்கள். சந்ததி என்று தமிழில் கூறலாம்.

1ஜி தொழில் நுட்பம் நமக்கு முதல் வயர்லெஸ் மொபைல் போனைத் தந்தது. இது அமெச்சூர் ரேடியோவைக் காட்டிலும் சிறிது மேம்பட்டிருந்தது. 1970 முதல் 1980 வரை இத்தகைய போன் பயன்பாட்டில் இருந்தது. இந்த போன்கள் செல்லுலர் மொபைல் ரேடியோ டெலிபோன் என அழைக்கப்பட்டன.

அடுத்த மேம்பாட்டின் அடிப்படையில் 2ஜி தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டு இன்று வரை நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த வசதி 1990 முதல் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் இருந்து வருகிறது. சி.டி.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். வழிகளில் டிஜிட்டல் வாய்ஸ் அமைப்பின் அடிப்படையில் இது இயங்கத் தொடங்கி இன்று பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அலைவரிசை முன்னேற்றம், தகவல்கள் அனுப்புவதில் வேகம், மல்ட்டிமீடியா பரிமாற்றம் மற்றும் இயக்கம் என பல முனைகளில் இந்த பயன்பாடுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடுத்த முன்னேற்றம் தான் 3ஜி.

3ஜி நுட்பம் தரும் சேவைகள் பலவாகும். திறன் கூடிய மல்ட்டி மீடியா வசதிகள்; வாய்ஸ், டேட்டா, வீடியோ மற்றும் ரிமோட் கண்ட்ரோல் என அனைத்து பிரிவுகளையும் மொபைல் போனில் கொண்டு வர முடியும். மொபைல் போன், இமெயில், பேக்ஸ்,வீடியோ கான்பரன்சிங் மற்றும் வெப் பிரவுசிங் ஆகிய வசதிகளை இந்த தொழில் நுட்பம் தருகிறது. மிக அகலமான பேண்ட்வித் மற்றும் அதிவேக தகவல் பரிமாற்றம் இதன் தனிச் சிறப்பு. உலகின் எந்த மூலையில் இருந்தும் இதன் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, மேலே குறிப்பிட்ட வசதிகளை மேற்கொள்ளலாம்.

3ஜி / 2ஜி வேறுபாடு: தகவல் பரிமாறும் நேரம் மற்றும் வேகம் தான் இதன் குறிப்பிட்ட வேறுபாடு எனச் சொல்லலாம். 3ஜி நொடிக்கு 3 மெகா பிட்ஸ் அளவில் தகவல்களைக் கொண்டு செல்ல வல்லது. அதாவது 3 நிமிடம் பாடக் கூடிய ஒரு பாடலின் எம்பி3 பைலை 15 விநாடிகளில் இறக்கிக் கொடுக்கும். இதனுடன் 2ஜியை ஒப்பிடுகையில் அதன் வேகம் நொடிக்கு 144 கிலோ பிட்ஸ் தான். மேலே சொன்ன பாடல் பைலை இறக்கம் செய்திட 2ஜி மூலம் 8 நிமிடங்கள் ஆகும். எனவே தான் பெரிய அளவில் உள்ள மல்ட்டி மீடியா பைல்களை (பாடல், ஆடல், வீடியோ) ஆகியவற்றை இன்டர்நெட்டிலிருந்து இறக்கம் செய்திட இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

3ஜி போன்கள் அனைத்தும் ஏறத் தாழ ஒரு சிறிய லேப் டாப் கம்ப்யூட்டரைப் போல் செயல் படும். பிராட் பேண்ட் இணைப் பில் மேற்கொள்ளக் கூடிய வீடியோ கான்பரன்சிங், இணையத்திலிருந்து ஸ்ட்ரீமிங் வீடியோ, பேக்ஸ் செய்திகளை உடனுடக்குடன் இணையத்திலிருந்து இறக்க, இணைக்கப் பட்டவை எவ்வளவு பெரிய பைல்களானாலும், இமெயில்களுடன் இறக்கி எந்நேரமும் படிக்க என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மொபைல் டிவி மற்றும் தொலைவில் பல இடங்களில் உள்ளவர்கள் ஆங்காங்கு இருந்தவாறே கருத்துக்களைப் பரிமாறும் வீடியோ கான்பரன்சிங் ஆகியவை 3ஜியில் கிடைக்கும். 2ஜி அலைவரிசையில் நமக்குப் பயன்படுத்தக் கிடைப்பது எஸ்.எம்.எஸ். மற்றும் ஆடியோ மட்டுமே. இடையே 2.5ஜி என்று அழைக்கப்படும் தொழில் நுட்பத்தில் 3ஜியின் வசதிகளின் தொடக்க நிலைகள் கிடைத்தன. இன்று நாம் பயன்படுத்தும் ஜி.பி.ஆர்.எஸ். போன்ற வசதிகள் இதன் அடிப்படையிலேதான் வந்தன. 3ஜி சேவை வழங்குவதையும் பெறுவதையும் நடைமுறைப்படுத்த சேவை நிறுவனங்கள் புதிய வகை கோபுரங்களையும் உயர்நிலை சாதனங்களையும் அமைக்க வேண்டும். இந்த வரிசையில் இறுதியில் உள்ள பயனாளிகள் 3ஜி தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலான போன் செட்களை வாங்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 2ஜி சேவைகளை 3ஜி அலைவரிசையில் தரலாம்; ஆனால் 3ஜி அலைவரிசை சேவைகளை 2ஜி அலைவரிசைக்கான சாதனங்கள் வழி தர முடியாது.
3ஜி சேவையினைப் பெற பயனாளர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். 3ஜி தொழில் நுட்பம் மூலம் கிடைக்கக் கூடிய சேவைகள் அனைத்தும் முதல் நிலையிலேயே கிடைக்காது. படிப்படியாகத் தான் இவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை வழங்கிட அதிக அளவில் லைசன்ஸ் கட்டணம் விதிக்கப்படும். மேல் நாடுகளில் இதனை மக்களுக்கு தருவதனைச் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட பல நிறுவனங்கள் தொடக்கத்தில் அதிக செலவு செய்தும் செய்திட முடியாமலும் கஷ்டங்களை அனுபவித்தன. அதே நிலை இங்கும் ஏற்படலாம். நிதிச் சுமையில் இந்த நிறுவனங்கள் சிக்கிக் கொண்டால் அரசு இவர்களுக்கு சலுகைகள் வழங்கிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த அலைவரிசையில் உருவாகும் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் உடல் நலத்திற்கு எந்த அளவில் தீங்கு விளைவிக்கும் என்ற ஆய்வு இன்னும் மேற்கொள்ள பட்டு வருகிறது. இது குறித்து முரணான தகவல்களும் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

முதன் முதலில் பெரிய அளவில் வர்த்தக ரீதியாக 3ஜி போன்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தது ஜப்பான் நாடு. 2005ல் ஜப்பானில் வயர்லெஸ் இணைப்பு பயன்படுத்திய 40% மக்கள் 3ஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையைப் பயன்படுத்தினார்கள். வீடியோ டெலிபோன் என்பது இந்த தொழில் நுட்பத்தின் மிகச் சிறிய பயன்பாடு; இன்னும் பெரிய அளவில் இதனைப் பயன்படுத்தலாம் என்று பிற நாடுகளுக்கு ஜப்பான் வல்லுநர்கள் காட்டினார்கள். அவையே பிற நாடுகளுக்கும் பரவியது. ஹை ஸ்பீட் இன்டர்நெட் மற்றும் வீடியோ டெலிபோன் ஆகிய இரண்டு வசதிகளும் இன்று சிறு பிள்ளைகள் கூடப் பயன்படுத்தும் அளவில் முன்னேறியுள்ளது. 3ஜி போன் சேவை வழங்குவதில் நிச்சயம் போட்டி இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் கலந்து கொள்ளும். எனவே இந்த சந்தையில் நுகர்வோராகிய மக்கள் தான் எஜமானர்களாக இருப்பார்கள். குறைந்த கட்டணத்தில் கூடுதல் சேவை கிடைக்கும். ஆனால் அனைத்து பிரிவு மக்களும் 3ஜி சேவையில் கிடைக்கும் கூடுதல் மற்றும் நவீன வசதிகளை உடனே பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே.

3ஜி வகை ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் கூட தொடங்கப்பட்டுவிட்டது. ஏர் டெல் நிறுவனத்தின் மையங்களில் 3ஜி ஆப்பிள் ஐ–போனை யாரும் எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். 3ஜி ஐ–போனில் ஐ–போனுக்கான வசதிகளுடன் 3ஜி அலைவரிசை தரும் வசதிகளை மேற்கொள்ள தொழில் நுட்பம் தரப்படும். முதலில் வெளிவந்த ஐ–போனைக் காட்டிலும் இரு மடங்கு வேகம் மற்றும் திறன் கொண்டதாக
3ஜி ஐ–போன் இருக்கும். ஒரு போன் இயங்கும் இடத்தை மையமாகக் கொண்டு சேவைகள் வழங்கும் தொழில் நுட்பம் இதில் இணைந்திருக்கும்.

ஐ–போன் சாப்ட்வேர் பதிப்பு 2 இதில் தரப்பட்டிருக்கும். இதன் மூலம் மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தரும் வசதிகளை இயக்கலாம். மூன்றாம் நபர் தரும் நூற்றுக் கணக்கான இணைப்பு புரோகிராம்களை இயக்கலாம். நிறுவனங்களிடையே போட்டியும் அதனால் ஆரோக்கியமற்ற தொழில் முறை உறவுகள் ஏற்படலாம். மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பங்காக மொபைல் போன் மாறிவிட்டது. தனிநபர் ஒருவரின் ஆசா பாசங்களுக்குட்பட்ட பல வகையான பயன்பாடுகள் இதில் கிடைக்கத் தொடங்கிவிட்டன.
இதில் 3ஜி போன் மூலம் கூடுதலாக வசதிகள் தந்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்திட நிறுவனங்களிடையே போட்டி ஏற்படலாம். தொடர்ந்த போட்டி, தொடர் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் விரிவடையும் வசதிகளுக்கான பின்னலமைப்பினை உறுதிப்படுத்துவது என்ற பல முனை செயல்பாடுகளில் 3ஜி சேவை நிறுவனங்கள் ஈடுபடும். போன்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றை அனைத்து பிரிவினரும் நாடும் வகையில் அமைக்கப் படலாம்.

மல்ட்டிமீடியா பணிகளுக்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அவற்றின் பேட்டரிகள் ஒரு பிரச்னையாகக் கருதப்படும். எனவே பேட்டரியினை மேம்படுத்த புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம். 2008 முதல் 2010 வரை 3ஜி அடிப்படையில் வசதிகளைத் தருவது பெரிய அளவில் வர்த்தக நடவடிக்கையாகவும் அதிக லாபம் தருவதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் இந்த நவீன புதிய வசதிகளைத் தங்கள் மொபைல் போனில் பயன்படுத்த விரும்புவார்களா என்பதும் இயலுமா என்பதுவும் கேள்விக் குறியே. இதற்கு இந்த வசதிகளைத் தரும் நிறுவனங்கள் மக்களிடையே புதிய வசதிகள் குறித்தும் அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த வசதிகளுக்கான கூடுதல் கட்டணத்தை மக்கள் செலுத்தும் அளவிற்கு பொருளாதார நிலை அமைய வேண்டும். இந்த நிலையில் இது உயர்நிலை மக்களுக்கானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.


விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்வது என்று முடிவெடுக்கையில் தோன்றும் அடிப்படைக் கேள்வி இதுதான் 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே மாறிய பலர், இப்படி ஒரு வேறுபாடு உள்ளதா? அப்படி யானால் என் கம்ப்யூட்டரில் என்ன போட்டுள்ளனர் என்றும் கேட்டு வருகின்றனர்.
நீங்கள் எந்த பிட் (32/64) சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், விண்டோஸ் ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, புதிய ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் ஒன்றை இணைக்கையில் கிடைக்கும் அனுபவத்தில் இதனைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த “பிட்’ என்பது என்ன?
64 அல்லது 32 பிட் என்று சொல்கையில், பிட் என்பது, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் குறிக்கிறது. இந்த எண் பைனரி எண் ஆகும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 1,2,3, என்ற டெசிமல் எண்கள் இல்லை. எனவே 32க்கும் 64க்கும் உள்ள வித்தியாசம், முதல் எண்ணை இரண்டால் பெருக்கிக் கிடைப்பது இல்லை. 64 பிட் கம்ப்யூட்டர், 32 பிட் கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் காட்டிலும் ஏறத்தாழ 400 கோடி மடங்கு அதிகமாகவே கையாளும். அவ்வளவு வேகமா? என்று கேட்க வேண்டாம். இது வேகத்தைக் குறிக்க வில்லை. இரண்டும் ஒரே வேகத்தில் தான் இயங்கும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு, அது கையாளும் தகவல்களின் அடர்த்தியில்தான் உள்ளது. 64 பிட் கம்ப்யூட்டர், மிகப் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும். கேம்ஸ் பயன்படுத்துகையில் தரப்படும் கிராபிக்ஸ் சிறப்பான தோற்றத்தில் அமையும். அதனால் தான், அறிவியல் பணிகளுக்கான கம்ப்யூட்டர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே 64 பிட் சிஸ்டத்தில் அமைக்கப்பட்டன.
64 பிட் சிஸ்டம் தரும் மிக முக்கிய நன்மை என்னவெனில், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரி, அதிக அளவில் அமைந்திருக்கும். 32 பிட் மாடல் கம்ப்யூட்டரின் மெமரி 4 ஜிபி வரை தான் இருக்கும். இது வந்த புதிதில் மிக அதிகமாகத் தோன்றினாலும், இப்போது பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், கேம்ஸ் ஆகியவை, 4 ஜிபி மெமரியினைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஹோம் கம்ப்யூட்டர்களில் 64 பிட் பயன்பாடும் தரப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிலேயே, ஏ.எம்.டி. நிறுவனம் ஏத்லான் 64, சிப்பினை வெளியிட்டது. தொடர்ந்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட 64 பிட் சிப்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்பட்டன. இப்போது ஹோம் கம்ப்யூட்டர்களிலும் இவை வந்து விட்டன.
தொடக்கத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றாலும், ஏற்கனவே பழக்கத்தில் இருந்த சாப்ட்வேர் புரோகிராம்கள், பிரிண்டர் மற்றும் சவுண்ட்கார்ட் போன்ற துணை சாதனங்கள், 64 பிட் சிப்களுடன் இணைந்து செயல்பட மறுத்தன. ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும் 64 பிட் இயக்கத்திற்கும் இணையாக இயங்கும்படி அமைக்கப் பட்டுக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழக்கத்தில் வந்துள்ளதால், இந்த மாற்றம் முழுமையாக நமக்குக் கிடைத்து வருகிறது.
நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுகையில் 64 பிட் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், புதிய ஹார்ட்வேர் எதனையேனும் இணைக்கையில், அதன் ட்ரைவர் புரோகிராம்கள், 64 பிட் இயக்கத்திற்கேற்ற வகையில் அமைக்கப் பட்டுள்ளனவா என்று கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். (ஒரு ட்ரைவர் புரோகிராம் என்பது, விண்டோஸ் சிஸ்டம் ஹார்ட்வேருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும்.) விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலும் 64 பிட் பதிப்பு இருந்தது. ஆனால் அது அவ்வளவாகப் பிரபல மாகாததால், ஹார்ட்வேர் சாதனங்களை உருவாக்கிய பல நிறுவனங்கள், 64 பிட் திறனுக்கேற்ற ட்ரைவர்களைத் தயாரித்து வழங்கவில்லை.
ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும், 64 பிட் திறனுக்கான ட்ரைவர்களைக் கொண்டுள்ளன. இதனை, அந்த ஹார்ட்வேர் சாதனத்தினைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஹோம் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, 64 பிட் சிஸ்டம் பயன்படுத்துவதில் கிடைக்கும் பெரிய அளவிலான பயன், அந்தக் கம்ப்யூட்டரில் 4ஜிபிக்கும் மேலான அளவில் மெமரி கிடைக்கும் என்பதே. இது பொதுவான பயன் பாட்டிற்கு அதிகமாகத் தோன்றினாலும், இன்றைய அளவில் வரும் பல புரோகிராம்கள், கிராபிக்ஸ் இணைந்த விளையாட்டுத் தொகுப்புகள், அதிக அளவில் மெமரியைப் பயன்படுத்து கின்றன. எனவே, 4 ஜிபிக்கு மேலாக மெமரி இருந்தால், பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்துவது எளிதாக அமையும். மேலும் விண்டோஸ் 7 சிஸ்டம் தன் இயக்கத்திற்கே அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டரில் மெமரி அளவு குறைவாக இருப்பின், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும். இதனை நாம் அதிக புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து இயக்குகையில் அறியலாம். நவீன முப்பரிமாண கேம்ஸ்களை இயக்குகையில், இதனை அறியலாம். இந்த கேம்ஸ்கள், மெமரியில் அதிகப் பங்கினைக் கேட்கும். எனவே மற்ற புரோகிராம்களை நாம் இயக்கவே முடியாது. 4ஜிபி அளவு இதற்கு ஈடு கொடுக்க முடியாது. எனவே, அதிக மெமரியினை அனுமதிக்கும் 64 பிட் சிஸ்டம் நமக்கு சிக்கலைத் தருவதில்லை. புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர் களுக்கு, கம்ப்யூட்டர் தரும் நிறுவனங்கள், பெரும்பாலும் 64 பிட் சிஸ்டங்களையே வழங்குகின்றன. நீங்கள்,உங்கள் பழைய கம்ப்யூட்டரில், புதிய விண்டோஸ் 7 தொகுப்பினை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், கம்ப்யூட்டரின் திறன் அறிந்து மேற்கொள்ள வேண்டும்.

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.

ஜெட் வேகத்தில் சீறும் சுனாமி : * கடற்பரப்புக்கு கீழ், கண்ணுக்கு தெரியாத சிறிய வடிவத்தில் சுனாமி உருவாகும். கடலின் மேல் பகுதியில் இருக்கும் கப்பலில் கூட, சுனாமி உருவாவதை உணர முடியாது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்த சுனாமி மிகப்பெரிய அளவில் உருவாகி, கடல் பரப்பு முழுவதும் வேகமாக பரவும்.
* சுனாமி என்பது ஒரே ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக கருதப்படுகிறது.
* சுனாமி அலைகள் கரையை நோக்கி அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும்போது, கடலுக்குள் இருந்த தண்ணீரின் கணிசமான பகுதி காலியாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப் பாறைகள் கூட, கண்ணுக்கு தெரியும். அந்த அளவுக்கு, தரைப்பகுதி தெரியும்.
* சுனாமி அலைகள் மிகவும் பிரமாண்ட உயரத்தில் வருவதால்தான், அழிவு ஏற்படுவதாக தவறான கருத்து கூறப்படுகிறது. கடலில் உள்ள பெரும்பகுதி தண்ணீர், வெள்ளமென புறப்பட்டு வருவதன் காரணமாகவே அழிவு ஏற்படுகிறது. கடலில் இருந்து வேகமாக வரும் வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும். இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும். சுனாமி அலைகள் கரையை நோக்கி வரும்போது, ஒருசிலர், அதை சமாளித்து தப்பி விட முடியும். ஆனால், சுனாமி அலைகள், கடலை நோக்கி வேகமாக திரும்பும்போது, கடலுக்குள் எல்லாமே அடித்துச் செல்லப்படும்.

உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெருமளவில் பயனளித்து வருகின்றன.
* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.
*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.
*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.
* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.
* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.
*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறை
யினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.

பசிபிக் கடல் பகுதியில் அச்சத்தில் பல நாடுகள் : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பயங்கரமான சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. இதனால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க நிலவியல் நிபுணர்கள், அதன் விளைவு குறித்து ஆராய்ந்தனர். ஜப்பானின் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், அங்கு புறப்படும் சுனாமி அலை மணிக்கு 500 மைல் வேகத்தில், பசிபிக் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் தாக்கும் என்பதால், அப்பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலைகளின் உயரம்15 அடி முதல் 21 அடி உயரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம், தைவான், ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, சமாவோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹவாய், வட அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா, தென் அமெரிக்காவின் பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இவை தவிர சிறு தீவு நாடுகளான பிஜி, கவுதமாலா, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் இருந்து, உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜப்பானின் வடபகுதியில் உள்ள குரில் தீவுகளில் இருந்து, 11 ஆயிரம் மக்களை ரஷ்ய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி ஏற்படுவது குறித்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த பால் கன்னலி கூறுகையில்,”இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதுதான் எங்களது பெரும் கவலையாக உள்ளது. இந்த சுனாமி அந்த நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கும்’ என்று தெரிவித்தார்.

பூமிக்கு அருகே சந்திரன் அழிவுக்கு பஞ்சமில்லை : பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் வருகிறது. எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, “சூப்பர் மூன்’ என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத்தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்குஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷிமாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின்சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன?ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


டிசம்பர் தொடங்கியாச்சு… இனி பனிக் காலம்! பெண்களின் சருமம் பனிக் காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.

அதற்கு காரணம்…?

சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படு மந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும். இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.

பனிக் காலத்தில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைத் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.

உதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டு பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.

பனிக் காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பனிக் காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.

உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.

பெண்கள் உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெணை, கடுகு எண்ணை ஆகியவை சிறந்தது.

சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.

பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் ழுழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்’ தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.

தேங்காய் எண்ணை, பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேயப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக் காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.

பனிக் காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கபடும்.

முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரபிகள் ஓரளவு சுறுசுறுபடையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணைத் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.


புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களுக்கு மட்டுமே வரும் வியாதி ஆகும். அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ள புரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளே நாளடைவில் புற்றுநோய் ஆக மாறுகிறது. பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறி தெரிவதில்லை. இந்த வியாதி இங்கிலாந்தினரையே அதிகம் தாக்குகிறது. அவர்களில் வருடத்திற்கு சுமார் 35,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 10,000 பேர் வரை இறக்கின்றனர். தற்போது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முதற்கட்டமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட 7 பேர்களின் புற்றுகட்டிகளின் மரபணுவை முழுவதும் பகுப்பாய்வு செய்தனர். பின்னர் அவை ஆரோக்கியமான ஒருவரது மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. அப்பொழுது புற்றுநோய் பாதிப்பு கண்ட மரபணுவின் குறியீடுகளில் ஏறத்தாழ 5,900 எழுத்து பிழைகள் காணப்பட்டன. எனினும் இந்த பிழைகள் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றில் காணப்படுவதை காட்டிலும் மிக குறைவே ஆகும். மேலும் மரபணுவின் பெரும்பான்மையான பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய தீர்வினை தரும் என கருதப்படுகிறது.



உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 முதல் 80 வயது வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!


இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites). இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் கிடைக்கின்றன.
இணையத்தில் வலம் வருபவர்களில் 95% பேர் நிச்சயம் இந்த தளங்கள் மூலம் நண்பர்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இணையத்தில் உள்ள சமுதாய இணைய தளங்கள் குறித்துச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1. ட்விட்டர் (Twitter): 2006 ஆம் ஆண்டில் ஜாக் டார்சி (Jack Dorsey)என்பவரால் தொடங்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்.க்குப் பதிலாக இணையம் தரும் மாற்றாக இயங்குகிறது. நிறுவனங்களோ, தனி நபர்களோ, தங்களுக்குள் சிறிய அளவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் அக்கவுண்ட் தொடங்குவது எளிது. முதலில் ஆங்கிலத்தில் தொடங்கினாலும், பின்னர் பிற மொழிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
2. யு-ட்யூப் (You Tube): வீடியோ பைல்களை இணையம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள, கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் இணைய தளம். “நீங்களாகவே உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்’ என்ற இலக்குடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வுலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என, டைம் இதழ் நவம்பர் 2006ல், இந்த தளத்தினை அறிவித்தது. மிக எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். பல அறிவு சார்ந்த தேடல்களுக்கு நல்ல தீனி வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இருப்பினும் சில மோசமான அநாகரிகத் தகவல்களும் இடம் பெற வழி தருகிறது. இதன் சமுதாயத் தணிக்கை சரியானால், நன்றாக இருக்கும்.
3. பேஸ்புக் (Facebook): ஹார்ட்வேர் பல்கலைக் கழக முன்னாள் மாணவரான மார்க் ஸக்கர் பர்க் (Mark Zuckerberg) என்பவரால் தொடங்கப்பட்டது. மிக அதிகப்படியான எண்ணிக்கையில் வசதிகளைக் கொண்ட சமுதாய இணக்க இணைய தளமாக இது இயங்குகிறது. வெற்றிகரமான ஓர் தளமாக உலகெங்கும் புகழ் பெற்று இது இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர் களைத் தேடி அறிந்து அளவளாவவும், ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்களை அறிந்து நண்பர்களாக்கிக் கொள்வதிலும் இந்த தளம் உதவுகிறது. கணக்கற்ற அளவில் போட்டோக்களை அப்லோட் செய்திட உதவுகிறது. மொபைல் போன் வழி தொடர்பும் எளிதாக உள்ளது.
4. ஹி 5 (Hi 5): இந்திய மண்ணிலிருந்து உதயமான சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். 2003ல் ராமு எலமாஞ்சி என்பவரால் தொடங்கப்பட்டது. 2008ல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 20 தளங்களில் ஒன்றாக இடம் பெற்றது. ஒருவருக்கொருவர் நட்பு தேடி, அழைப்புகளை அனுப்பி, அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் தொடரும் உறவுகளால் இந்த தளம் இயங்குகிறது. இதில் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்க, இந்த தளம் தனக்கென ஒரு மீடியா பிளேயரைக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.
5. ஆர்குட் (Orkut): கூகுள் நிறுவனத்தால், 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் ஊழியர் ஆர்குட் என்பவரால் இது வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. எனவே அவர் பெயரையே இந்த தளமும் கொண்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும் இது பிரபலமானது. பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டது.
வேவ், பஸ் (Wave, Buzz) போன்ற தளங்கள் தொடங்கப்பட்டு சில காலம் கழித்து நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே, பல சோஷியல் தளங்கள் உருவாகி, அவ்வளவாக ஆதரவு இல்லாமல் அப்படியே முடங்கிப் போய்விட்டன. இன்னும் பல தளங்கள் தோன்றலாம். சில பிரபலமாகலாம். சமூக உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறப்பான இடம் பெறலாம்.
இந்த தளங்கள் அனைத்தும் புதிய சமுதாய கூடல்களுக்கு இடம் தருகின்றன என்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். இருப்பினும் இந்த தளங்களில் நம் இடத்தைச் சற்று பாதுகாப்புடனே தான் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகையில், உங்கள் விருப்பங்களையும், விரும்பாதவற்றையும் அழுத்தமாகவே குறிப்பிடவும். நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைச் சந்தேகத்திடமின்றி விளக்க மாகத் தந்துவிடுங்கள். போட்டோ பதிப்பதாக இருந்தால், உங்களின் இன்றைய போட்டோவினைப் பதிக்கவும். இது உங்கள் நண்பர்கள் உங்களை அடையாளம் கண்டு, தொடர்பினைப் புதுப்பிக்க உதவும். பிரைவசி செட்டிங்ஸ் எந்த நிலைகளில் அமைக்கலாம் (‘All’, ‘Friends and Networking’,’Friends of Friends’, ‘just friends’, மற்றும் ‘personalised’) என்பதனை உணர்ந்து அமைக்கவும். எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றின் விளைவுகளைப் புரிந்து கொண்டு, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கவும்.
நீங்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் எந்த சொல் அல்லது சொல் தொடரையும் இந்த தளங்களில் எங்கும் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். உங்களை மற்றவர்கள் காண்பதைச் சற்று வரையறைகளுடன் அமைக்கவும்.
உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் என்பதனைச் சரியாக செட் செய்திடவும். இந்த தளங்களைப் பயன்படுத்து கையில் அதீத கவனம் தேவை. இல்லை எனில் மற்றவர்கள் கைகளில் பட்டு, சிதறிவிடுவீர்கள்.

பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து வைத்து செயல்படுவது நம் வழக்கமாகிவிட்டது. இது நம் வேலைத் திறனை ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும் விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7 இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. இந்த வழிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் செயல்பாடு, நாம் செயல்படும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் சுருக்கி வைப்பது. இரண்டாவது அனைத்து விண்டோக்களையும் சுருக்கி வைப்பது.
1. ஏரோ ஷேக் (Aero Shake): விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்பு தரும் ஒரு நவீன தொழில் நுட்ப வசதி இது. நீங்கள் செயல்படும் விண்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மேலாக உள்ள பிரிவில், லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் மவுஸை சற்று அசைக்கவும். விண்டோவும் அசையும். இப்போது, நீங்கள் செயல்பட்டு, ஷேக் ஆகும் விண்டோ தவிர திறந்திருக்கும் மற்ற விண்டோக்கள் அனைத்து விண்டோக்களும் மறைந்து போகும். இந்த வசதி விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், ப்ரபஷனல், அல்ட்டிமேட் மற்றும் என்டர்பிரைஸ் எடிஷன் பதிப்புகளில் மட்டும் கிடைக்கிறது.
2. விண் +ஹோம்: உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் 7 பதிப்பில் ஏரோ ஷேக் வசதி இல்லையா? கவலைப்பட வேண்டாம்; இந்த விண்டோக்களை மூடும் வேலையை இரு கீகள் மூலம் மேற்கொள்ளலாம். Win + Home கீகளை ஒரு சேர அழுத்தவும். செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மறைவதைப் பார்க்கலாம். விண் ஷேக் வசதி விசேஷமாக உள்ளதே; ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் அது இல்லையே என்று கவலைப்பட்டு, அந்த வசதியினை அனுபவிக்க வேண்டும் என எண்ணினால், விண்ஷேக் என்ற அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி
3. விண்டோக்களைச் சுருக்க: திறந்திருக்கும் அனைத்து விண்டோக் களையும் சுருக்கி டாஸ்க்பாருக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? நீங்கள் அழுத்த வேண்டிய கீகள் Win + D. மீண்டும் இந்த விண்டோக்கள் எழுந்து கொள்ள, அதே கீகளை மீண்டும் அழுத்தவும்.
4. டெஸ்க் டாப் காட்டும் பட்டன்: அடுத்து இது தொடர்பான இன்னொரு வசதியையும் விண்டோஸ் 7 சிஸ்டம் தருவதனைப் பார்க்கலாம். இதன் டாஸ்க்பாரின் முடிவில், விண்டோஸ் கடிகாரம் அருகே, ÷ஷா டெஸ்க்டாப் பட்டன் இருப்பதனைக் காணலாம். இந்த பட்டன் அருகில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அதனைச் சற்று சுற்றவும். இப்போது திறந்திருக்கும் விண்டோக்கள் அனைத்தும் ஒளி ஊடுருவும் தன்மையுடன் (ட்ரான்ஸ்பரண்ட்) காட்டப்படும். இந்த வசதியில், நாம் எந்த விண்டோவினையும் மினிமைஸ் செய்திடாமல் பார்க்கலாம். இந்த பட்டனில் கிளிக் செய்தால், அது அனைத்து விண்டோக்களையும் உடனே மூடிவிடும். மீண்டும் கிளிக் செய்தால், திறக்கும்.

கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.
CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.
CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.
CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.
DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.
SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.
F2 key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட
CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல
CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.
CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.
ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட
F3 key: பைல் அல்லது போல்டரைத் தேட
ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.
CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.
ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.
ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க
F10 key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.
ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.




இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரிய அளவில் நாம் இலக்குகளை எட்டவில்லை என்றாலும், இந்திய இன்டர்நெட் குறித்து நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
கூகுள் தேடல் இஞ்சின் இயக்கத்தினை நிர்வகிக்கும் அலுவலர் ஒருவர், இன்றைய இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை அண்மையில் கொல்கத்தா வில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது உலக அளவில் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா 20. 7 கோடி பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் இன்னும் 4 கோடியாகத்தான் உள்ளது. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் உயர்ந்திடும் எனவும் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் இந்திய இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை 2 கோடியாகத்தான் இருந்தது. தற்போது இது 20 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு இன்டர்நெட் பயன்படுத்து வோரில் அதிகம் பேர் பாடல்களைத் தான் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன் முதல் .com என்ற துணைப் பெயருடன் தன் இணையதள முகவரியை இந்தியாவில் பதிந்த முதல் நிறுவனம் rediff.com ஆகும்.
இந்தியாவில் 1,80,000 சைபர் கபே மையங்களும், 75 ஆயிரம் சமுதாய சேவை மையங்களும் மக்களுக்கு இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றன.
இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் தேடப்படுவதும், ரயில்வேக்குச் சொந்தமான www.irctc.in என்ற தளம் தான்.
84% இணையப் பயனாளர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குச் செல்கிறார்கள்.
இங்கு மொபைல் இன்டர்நெட், பெரும் பாலும் இமெயில் செக் செய்வதற்கும், தகவல்களைத் தேடுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது.
.com மற்றும் .net துணைப் பெயர் களுடன் இந்தியாவில் 10 லட்சத்து 37 ஆயிரம் தளங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget