23 மார்., 2011

ல்லியான உடலழகை விரும்பாத பெண்களே இல்லை. தனது உடல் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்களோ, கேலி செய்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். பசியும், பட்டினியுமாக கிடக்கிறார்கள். உடற்பயிற்சி எந்திரங் களுடன் அன்றாடம் மல்லுக்கட்டி வருகிறார்கள்.
உண்மையில் ஒல்லி உடல்தான் அழகா? மெலிவான மேனியைப் பெற பெண்கள் கடைப்பிடிக்கும் வழிகள் சரிதானா? என்பது பற்றி இங்கே சில பிரபலங்கள் பேசுகிறார்கள்.
ஒல்லியாக இருப்பதுதான் அழகா? என்ற கேள்விக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சலி பதிலளிக்கிறார்…
“மேலைநாட்டுப் பெண்கள் இயல்பாகவே ஒல்லியாக இருப்பார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளைப் பார்த்து நம்நாட்டுப் பெண்களும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைக்கின்றனர்.
பிரபலமான கம்பெனிகளின் விளம்பர மாடல்கள், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் மட்டுமன்றி சாதாரண குடும்பப் பெண்கள்கூட ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று நினைத்து வருகின்றனர். மெலிவான உடலைப் பெறுவதற்காக தங்களுடைய அன்றாட உணவைக் கட்டுப்படுத்துவதும், பசியில்லை என்று கூறும் அனோரெக்ஸியா என்கிற மனோவியாதிக்கு ஆளாவதும் தற்போது சகஜமாகிப் போயிருக்கிறது.”
“உணவின்றி அதிகமாகப் பட்டினி கிடப்பதும் ஒல்லியாக எலும்புந்தோலுமாக இருப்பதும் நமக்கு உகந்தது அல்ல. ஏனென்றால் நமது உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், மலட்டுத்தன்மை இல்லாதிருப்பதற்கும் 12 சதவீத கொழுப்புச்சத்து அவசியம் தேவை. எனவே ஒல்லி உடல் வேண்டுமென்று பட்டினி கிடப்பது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து” என்று எச்சரிக்கையும் செய்கிறார் டாக்டர் அஞ்சலி.

வயசுல பெரியவங்களா இருப்பாங்க…. சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு… இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது….
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், ‘சத்து மாத்திரை வேணாம்’னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க… காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான

நாம் வாழும் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு முழு காரணம் காந்த சக்தி மையமே இந்த காந்த சக்தி மைய வலிமையை பற்றி கலிபோர்னிய பல்கலைகழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறை பேராசிரியர் புரூஸ் ஏ. பபெட் என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன்படி பூமியின் உட்புறம் ஏறத்தாழ 1800 மைல்கள் (2,896 கி.மீ.) ஆழத்தில் இந்த காந்த சக்தி மையம் அமைந்திருக்கிறது என கண்டறிந்துள்ளார். இது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த சக்தி மையத்தை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. வெப்பமானது பூமிக்கு 3 விதமான வழிகளில் கிடைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை
1) சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது ஏற்பட்ட வெப்பம்
2) பூமிக்குள் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவியீர்ப்பு ஆற்றல் வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும்
3) நீண்ட காலமாக பூமியில் உள்ள பொட்டாசியம், யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் என வெப்பமானது பூமிக்கு கிடைக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
மேலும், பூமியின் உட்புறம் உள்ள காந்தபுலம் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடித்து வருகிறது. அதற்கு பூமியில் காணப்படும் இந்த வெப்பமே அடிப்படை ஆகும். உற்பத்தியாகும் வெப்பமானது தொடர்ந்து காந்தபுலத்தை தோற்றுவிக்கும் ஒரு சிறந்த சக்தியாக விளங்கி வருகிறது.

கடந்த 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 என்ற இரு விண்கலங்களை விண்ணிற்கு அனுப்பியது. வாயஜர் 1 விண்கலம் ஆனது மணிக்கு 38,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் வடக்கு பகுதியிலும், வாயேஜர் 2 விண்கலம் மணிக்கு 35,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் தென் பகுதியிலும் சுற்றி வருகிறது. பூமியில் காற்று இருப்பது போல் சூரியனின் வெளிப்பகுதியில் காற்று மற்றும் வாயுக்கள் ஆகியவை உள்ளன. ஆனால் இவை மணிக்கு 1 மில்லியன் மைல்கள் அளவு திசைவேகம் கொண்டவை. இந்த பகுதியை ஹீலியோபாஸ் என அழைக்கின்றனர். இந்த காற்று பகுதியை 2004 ஆம் ஆண்டிலிருந்து வாயேஜர் விண்கலம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த பகுதியை விண்கலம் வாயேஜர் 1 நெருங்கியதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஹீலியோபாஸின் எல்லை பகுதியில் உள்ள காற்றின் திசைவேகம் விண்கலத்தின் சுற்றுவேகத்திற்கு இணையாக இருப்பது இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதனை கடந்த சில மாதங்களாக நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். நாசாவின் விஞ்ஞானியான எட்வர்டு ஸ்டோன், இந்த தருணத்தை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். விண்கலம், ஹீலியோபாஸ் பகுதியை நெருங்கி கொண்டிருக்கிறது, இன்னும் 4 வருடங்களில் விண்கலம் வாயேஜர்

வாழ்வின் உயிர்நாடியாக இருப்பது கார்பன். எல்லா உயிரினங்களிலும், எல்லா பொருட்களிலும் குறைந்தது ஒரு சதவிகிதமாவது இத்தனிமம் உள்ளது. தனிம அட்டவணையில் 6-வது இடத்தில் இருப்பது இதுதான். கார்பனில் ஒவ்வொரு அணுவும் மற்ற நான்கு அணுக்களுடன் உறுதியாகப் பிணைந்துள்ளன. இந்த நான்கில் ஒவ்வொன்றும் வேறு நான்கு அணுக்களுடன் இணைந்துள்ளன. இவற்றைப் பிரிப்பது கடினம்.
கரியின் பலவகைகள் கார்பனையே குறிக்கின்றன. கார்பன் என்ற இத்தனிமம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை. `கிரா’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு `கொதிக்க வைக்கும்’ என்ற பொருள் உண்டு. கரி என்ற பொருள்படும் லத்தீன் மொழிச் சொல்லின் வேர் இதிலிருந்து தோன்றியது என்று கூறப்படுகிறது.

பூச்சி இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது. இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி செல்கின்றன. அதனை கண்டவுடன் இனப்பெருக்கம் நடைபெற்று விடுவதில்லை. முதலில் பெண் சிலந்தியின் வலையை ஆண் சிலந்தி தனது காலால் மெல்ல தட்டுகிறது. அதற்கேற்ப பெண் சிலந்தியிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆண் சிலந்தி இனப்பெருக்கத்திற்கு உரிய சில அங்க அசைவு களை செய்கிறது. அதில் ஈர்க்கப்படும் பெண் சிலந்தியுடன் ஆண் சிலந்தி ஒன்றாய் கூடுகிறது. எனினும் சில சமயங்களில் இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அந்த சிலந்தியின் இனமே பிற்காலத்தில் இல்லாத வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்த்து அவை எவ்வாறு வாழ்கின்றன என கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோனாதன் ப்ரூட் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக ஆய்வகத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலையிலுள்ள சில இளம் சிலந்திகளை ஜோடியாக விட்டனர். சில இளஞ்சிலந்திகளை தனியாக வைத்திருந்தனர். இனப்பெருக்கத்திற்கு உரிய பருவத்தில் சிலந்திகளில் ஒரு ஜோடி மிக வேகமாக தங்களுக்குள் ஒன்றாக கூடின. இந்த வேகம் தங்களது சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவ்வாறு இல்லாவிட்டால் வேறு சிலந்தியால் குறுக்கிடப்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக தான். மேலும் அதி விரைவாக செயல்படுவதால் அது ஜோடிகளுக்கு பாதுகாப்பினை தருகிறது. இந்த கூடுதலில் பெண் சிலந்திக்கு ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா-? என ஆராய்ந்ததில் ஆம் என்பதே பதிலாக இருந்தது. ஜோடிகள் ஒன்றாக கூடும் இந்த நிகழ்வில் ஆண் சிலந்தி சாதனை செய்த பெரியவராகி விடுகிறது. மேலும் வேறு சிலந்தியினால் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுபட்டு போதுமான பாதுகாப்பும் ஏற்பட ஏதுவாகிறது என ஆய்வாளர் ப்ரூட் தெரிவித்தார்

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.
எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.  மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.
பாதுகாப்பு முறை
விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம்,  பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம்.  முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும்.
பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget