மயான கொள்ளையனாக பூலோகம் ஜெயம்ரவி

ஆதிபகவன் படத்தையடுத்து ஜெயம்ரவி நடித்து வரும் படம் பூலோகம். வடசென்னையைச்சேர்ந்த கிக் பாக்சர்கள் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் உருகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும இப்படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிக்காக, சென்னை நகரத்தின் அழிந்து விடாமல் இருக்கும் சில குல வழக்கங்களை மையமாகக் கொண்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
அதில் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் தமிழினத்தின் பிரத்தியேக குல வழக்கமான மயான கொள்ளை காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் படமாக்கப்பட்ட இந்த மயான கொள்ளை காட்சிக்காக தனது உடம்பை வெயிட் போட வைத்து நடித்துள்ளார் ஜெயம்ரவி. அதோடு இதுவரை அவர் எந்த படத்திலும் நடித்திராத வேடம் என்பதால், அதிக ஈடுபாடு காட்டி, பக்தி பரவசத்துடன் ஆவேசமாக இக்காட்சியில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அவர் நடித்ததைப்பார்த்து கூடிநின்ற மககள் மிரண்டு போனார்களாம். அந்த அளவுக்கு ஆக்ரோஷமான நடிப்பு அவரை உக்கிரமாக காட்டியுள்ளது. அருகில் இருக்கும் படத்தை பாருங்கள், ஜெயம் ரவியின் ஆக்கோரஷமான பக்தி பரவசத்தை...!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget