ஆசாமி திரைக்கு வர உதவிய போலி சாமியார்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று ஆசாமி, ஆண்டாள் ரமேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் போலி சாமியார்களின் லீலைகளை சொல்லும் படம். சந்தானபாரதி, நெல்லை சிவா, பாண்டு ஆகியோர் போலி சாமியார்களாகவும், ஷகிலா போலி பெண் சாமியாராகவும் நடித்துள்ளார். முதலில் இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி தர மறுத்து விட்டனர். இதனால் தயாரிப்பாளர் மறுஆய்வு கமிட்டிக்கு வின்னப்பித்தார்.
அங்கும் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் தயாரிப்பாளர் நித்யானந்தா சாமியார் பற்றி சமீபத்தில் வெளிவந்த வீடியோக்களை தணிக்கை குழுவுக்கு போட்டுக் காட்டினார். அதைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதையே விளக்கமாக ஏற்று படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தனர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget