அதிசய ஈஸ்டர் தீவு!


தென் பசிபிக் கடலில் சென்று கொண்டிருந்த டச்சுக் கப்பலின் தலைவர் ஜேக்கப் ராசீவன், ஒரு தீவில் கோட்டை போல காணப்பட்ட சுவரின் மீது 30 அடி உயரமுள்ள ராட்சதர்கள் நிற்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோதுதான் அவை ராட்சதர்கள் அல்ல, சிலைகள் என்பதும், கோட்டைச் சுவர் போலத் தோன்றியது மேடை என்பதும் தெரிந்தன. அந்தச் சிலைகள் நீண்ட காதும், சிவந்த மூக்கும் கொண்டவையாக இருந்தன. மாலுமி ஜேக்கப் அந்தச் சிலைகளைக் கண்டது 1722-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று. எனவே அத்தீவுக்கு `ஈஸ்டர் தீவு’ என்றே பெயரிட்டார். பின்னர் நூறு வருடங்கள் கழிந்த பின்னரே அத்தீவைப் பற்றி பிறர் ஆராயத் தொடங்கினர்.

அப்போது சிலைகள் நின்றுகொண்டிருக்கவில்லை. அவை தரையில் தாறுமாறாக விழுந்து கிடந்தன. அருகில் உள்ள உறங்கும் எரிமலையில் சிலைகள் செதுக்கப்பட்டு, கீழே கொண்டு வந்து நிறுவப்பட்டிருக்கின்றன. அப்படி 300-க்கும் மேற்பட்ட சிலைகள் காணப்படுகின்றன. இன்னும் பூர்த்தியடையாத 400 சிலைகள், மலையில் உள்ளன. உளிகளும், சுத்தியல்களும் கூட அத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடி உயரம் உள்ளது. முடிக்கப்படாத ஒரு சிலை 66 அடி உயரமுள்ளதாக உள்ளது. மலையில் இருந்து 10 மைல் தூரத்தில் கூட சிலைகள் உள்ளன. அவ்வளவு பெரிய சிலைகளை எப்படித் தூக்கிவந்து மேடை மீது நிறுத்தினார்கள் என்பது விளங்கவில்லை.

ஈஸ்டர் தீவில் முற்காலத்தில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வாழ்ந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த மக்கள், காதில் எடையைத் தொங்கவிட்டு நீளமாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சிலைகள், அரசர்களுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இப்போது ஈஸ்டர் தீவில் யாரும் இல்லை. அங்கு முற்காலத்தில் வசித்த மக்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. அம்மக்கள், அந்த மாபெரும் சிலைகளை எப்படி வடித்தார்கள், அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வழியே இல்லாமல் போய்விட்டது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget