தட்டச்சு எந்திரம்

எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப்ரைட்டர்’ என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத்துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன்றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற்காக கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரியப்படுவீங்க!

பார்வையற்றவர்களுக்கு உதவுற மாதிரி தான் முதன்முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக அமெரிக்காவுல 1827-ம் ஆண்டு வில்லியம் பர்ட் என்பவர் ஒரு தட்டச்சு எந்திரத்தை உருவாக்கினார். அது `டைப்போகிராபர்’னு அழைக்கப்பட்டுச்சு. ஆனால், அதனுடைய மாதிரி எதுவும் இப்ப கிடையாது. அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தட்டச்சு எந்திரத்தை வடிவமைக்க முயற்சி செஞ்சாங்க. 1873-ம் ஆண்டு அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான தட்டச்சு எந்திரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஷோவ்ஸ், சாமுவேல் சோல், கார்லோஸ் கிளிட்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்களும் சேர்ந்து அதை தயாரிச்சாங்க. அதன்பின்னர் பல்வேறு வசதிகளுடன் தட்டச்சு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. கணினிகளுக்கு முன்னோடியா இதைச் சொல்றாங்க. தற்போது இதன் பயன்பாடுகள் குறைவா இருந்தாலும், கணினியை எளிதா பயன்படுத்த தட்டச்சு எந்திரம் உதவுது

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget