இன்று பவர் ஸ்டார் நாளை சூப்பர் ஸ்டார்!


ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கேம் ஷோ ஒன்றில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் போட்டியில் தான் ஜெயித்த பணத்தை தோல்வியடைந்த பெண்களுக்கு பரிசாகக் கொடுத்தார். நடிகை ரோஜா நடத்தும் கேம்ஷோ லக்கா கிக்கா. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்று பரிசினை பெற்றுச் செல்கின்றனர். கடந்த வார நிகழ்ச்சியில் திரைப்பட நடன பெண்மணிகள் செந்தாமரை, மைனா நாகு ஆகியோருடன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றார்.

ஒவ்வொரு சுற்றிலும் பவர் ஸ்டாரின் கையே ஓங்கியது. ரூ.36,000 வரை போட்டியில் ஜெயித்தார் சீனிவாசன். போட்டியில் கலந்து கொண்ட பிற பங்கேற்பாளர்களுக்கு 4000, 7000 ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன. இறுதியில் 36000 ரூபாய் ஜெயித்த சீனிவாசன் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பரிசுத் தொகைக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால் பெருந்தன்மையாக தன்னுடைய பரிசுப்பணத்தை போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்த செந்தாமரை, மைனா நாகு ஆகியோருக்கு வழங்கி விட்டார் பவர் ஸ்டார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget