ராகு மற்றும் கேது பெயர்ச்சி பொது பலன்கள்


நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (02.12.2012) ஞாயிற்று கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் காலை மணி 10.51க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2க்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில்
சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். 

ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான். எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களே. எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களே எந்த எந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனை தவறாமல் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை.
ராகுவால் ஏற்பட போகும் பலன்கள்:

வியாபாரச் சின்னமான தராசுக் குறியீடுடைய சுக்ரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் பாரம்பரிய வியாபாரிகள் பாதிப்படைவார்கள். சுதேசிப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை குறையும். உணவு பதுக்கல் அதிகமாகும். விலைவாசி ஏற்றம் கடுமையாக இருக்கும். 7.6.2013 முதல் 11.12.2013 வரை சனியும், ராகுவும் யுத்தம் செய்வதால் விமான விபத்து, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, விபத்துகள், பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன், ஈத்தேன், ஆர்கன் போன்ற மந்த வாயுக்கள் வெளிப்பட்டு அதனால் பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்வது, நிரைப்பதை தடுக்க புதிய மருந்து கண்டறியப்படும். 

முகச்சீரமைப்பு, இதய அறுவை சிகிச்சை துறை நவீனமயமாகும். மலை மற்றும் கடலோர நகரங்கள் பாதிப்படையும். தங்கத்தின் விலை ஜீன் 2013லிருந்து குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. வலைகுடா நாடுகள் மீது அமெரிக்காவின் பார்வை மீண்டும் திரும்பும். சமூக எதிர் நடவடிக்கை கும்பல்கள் புது தாக்குதலை நடத்தும். போதை மருந்து, தங்கம் கடத்தல் அதிகரிக்கும். வன்முறையாளர்களை தடுக்க கடும் சட்டம் வரும். மத்தியில் கூட்டணி மாறும். எதிர்த்தவர்கள் ஒன்று சேருவார்கள். ஆளுபவர்கள் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். 

அனைத்து துறைகளிலும் பெண்கள் கை ஓங்கும். பெண் சாதனையாளர்கள் அதிகரிப்பார்கள். மணம் முறிந்தவர்கள், விதவைப் பெண்கள் சமுதாயத்தில் புகழடைவார்கள். ஆனால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும். பாமர மக்கள் பயனடையும் வகையில் புது சட்ட திட்டங்கள் உருவாகும். சாதாரணமானவர்களும் சாமான்யப் பதவியில் அமருவார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாவார்கள். உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும். அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்வார்கள். ஐ.டி. நிறுவனங்கள் சரியும். 

வங்கிகளளில் வராக்கடன் வசூலிக்க சட்டம் கடுமையாகும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியார் தாரை வார்க்கப்படும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டு பிடிக்கப்படும். ராணுவத்தில் புதிய ஏவுணைகள் சேர்க்கப்படும். காடுகள் சேதமடையும். அயல்நாட்டைப் போலவே இந்தியாவிலும் பல நவீன பெரிய கட்டடங்கள் உருவாகும். பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். கம்பியூட்டர், ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை விழும். சங்கல், சிமெண்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். 

பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். ஆனால் புதிதாக பாலியல் சம்பந்தமான நோய்கள் உருவாகும். அதற்கான மருந்துகளும் கண்டறியப்படும். அணைக்கட்டுகள் உடையும். ஷேர் மார்க்கெட், தங்கத்தின் விலையில் ஏற்ற-இற்றம் இருக்கும். வெள்ளி விலை உயரும். தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு உண்டாகும். முக்கிய தீவிரவாதிகள் பிடிபடுவார்கள். திரைத்துறை வளர்ச்சி அடையும். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக பல நவீன யுக்திகளை கையாண்டு தமிழ்ப் படங்களும் வெளிவரும். 

கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்:

கேதுபகவான் சுக்ரனின் ஸ்திர வீடான ரிஷப ராசியை விட்டு விலகி சர வீடான மேஷ ராசியில் அமர்வதால் பூமி விலை உயரும். என்றாலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ரியல் எஸ்டேட் பாதிப்படையும். நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும். புதிய நகரங்கள் உருவாக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் போலிகளை தடுக்க சட்டம் வரும். சந்தேகத்தால் சகோதரச் சண்டை அதிகரிக்கும். கூட்டுக் குடும்பங்கள் உடையும். மக்கள் மனதில் தன்னம்பிக்கை குறையும். நிம்மதி தேடி மக்கள் புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். ஆன்மிக தலைவர்கள் குற்றசாட்டுக்கு ஆளாவார்கள். பழைய கோவில்களில் புதையுண்டிருக்கும் மர்மங்கள் வெளி வரும். 

யோகாசனம், மூலிகை மருத்துவம் தழைக்கும். விபத்துகள் அதிகரிக்கும். காலப் புருஷனின் முதல் வீட்டில் கேது அமர்வதால் ஒற்றை தலை வலி, மூளைக் காய்ச்சல் அதிகரிக்கும். விநோதமான முகமைப்பில் உள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஈகோ, சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிவார்கள். விவாகரத்து அதிகரிக்கும். பூமி வெடிப்பால் நிலச்சரிவு அதிகரிக்கும். பாகப்பிரிவினை, சொத்துத் தகராறு அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேர்வு முறைகளில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்படும். கல்வி நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டு தரம் மேம்படுத்தப்படும். நவீன ரக க்ரேன், வாகனங்கள், எலக்ரானி பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். உண்ணா விரதம், கடையடைப்பு, வேலை நிறுத்தம் ஆங்காங்கே அதிகரிக்கும். போக்குவரத்து நெருசலை தடுக்க புதிதாக மேம்பாலம் உதயமாகும். 

ராகு கடந்து செல்லும் பாதை:

02.12.12 - 02.02.13 வரை விசாகம் 3-ல்
03.02.13 - 06.04.13 வரை விசாகம் 2-ல்
07.04.13 - 06.06.13 வரை விசாகம் 1-ல்
07.06.13 - 08.08.13 வரை சுவாதி 4-ல் 
09.08.13 - 11.10.13 வரை சுவாதி 3-ல் 
12.10.13 - 11.12.13 வரை சுவாதி 2-ல் 
12.12.13 - 13.02.14 வரை சுவாதி 1-ல் 
14.02.14 - 17.04.14 வரை சித்திரை 4-ல் 
18.04.14 - 21.06.14 வரை சித்திரை 3-ல் 


கேது கடந்து செல்லும் பாதை:

02.12.12 - 02.02.13 வரை கார்த்திகை 1-ல்
03.02.13 - 06.04.13 வரை பரணி 4-ல்
07.04.13 - 06.06.13 வரை பரணி 3-ல்
07.06.13 - 08.08.13 வரை பரணி 2-ல் 
09.08.13 - 11.10.13 வரை பரணி 1-ல் 
12.10.13 - 11.12.13 வரை அசுவனி 4-ல் 
12.12.13 - 13.02.14 வரை அசுவனி 3-ல் 
14.02.14 - 17.04.14 வரை அசுவனி 2-ல் 
18.04.14 - 21.06.14 வரை அசுவனி 1-ல் 

பரிகாரம்:
மூளை, முயற்சி, முணைப்பு தன்மானம், உணர்ச்சி கிரகமான செவ்வாயின் மேஷ வீட்டில் கேது அமர்வதால் ஜாதி, மாதப் பற்றை விட்டு விட்டு நாட்டுப் பற்று, மொழிப் பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். உணவு, உடை, உல்லாசம், கலைக்குரிய கிரகமான சுக்ரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் நவீன உடைகளை குறைத்து விட்டு பாரம்பரிய உடைகளை அணிவதுடன் கலப்படமில்லா பாரம்பரிய உணவுகளையும் உட்கொள்வோம். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget