முன் கோபத்தால் ஏற்படும் விளைவுகள்

1.நமது சொல்லை பிறர் ஏற்காதபோது அல்லது சொல்லியும் கேளாதபோது. 

2.பிறர் நம்மிடம் குறை காணும்போது 

3.பிறர் நம்மை அவமானத்திற்குள்ளாக்கும் போது 

4.நமது விருப்பப்படி காரியங்கள் நடக்காத போது.

5.களைத்துப் போய் வீடு திரும்புகையில் உணவு சரியில்லாதபோது 

6.குழந்தைகள் தொந்தரவு கொடுக்கும்போது

7.நமது மனதில் பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் இருக்கும்போது. 

8.பிறர் நம்மீது காரணத்தோடோ அல்லது அனாவசியமாகவோ கோபிக்கும் போது 

9.தூக்கத்தைக் கெடுக்கும் போது 

10. நமது அவசர வேலையில் பிறர் இடைஞ்சல் செய்யும்போது. 

11.பிறர் பொய் பேசும்போது 

12.நமது பெருந்தன்மையை, பிறர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது. 

13.நோய்வாய்ப்படிருக்கையில், சரியான உபசரிப்பு கிடைக்காதபோது கோபத்தால் புத்தி பேதலிக்கிறது. 

அறிவின் பிரகாசம் மங்கிவிடுகிறது. குளுமை குறைந்து அமைதி குன்றி விடுகிறது. இரத்த ஓட்டம் பாதிக்கிறது. கோபமிருந்தால் ஒருபோதும் இறையுணர்வை அனுபவிக்க முடியாது. கட்டுப்பாடு தவறி விடுவதால் எந்த ஒருவேலையையும் திறமையாகச் செய்ய முடியாது. 

உள்ளுக்குள் சூட்சுமமாக அடங்கியிருக்கும் பொறாமை மற்றும் பலவீனத்தின் அறிகுறியே கோபமாகும். இதனால் உறவு கெடும். குடும்பத்திலும் காரியாலயத்திலும் சுமுக நிலை பாதிக்கப்படும். 

அதிருப்தி நிலவும், பிறருக்கு அறிவுரை கூற முற்படுபவர், ஆனால் பிறர் சொல்லைக் கேளார். இதனால் தானும் துன்புறுவதோடு, பிறரும் இவரால் துன்புறுவர். இத்தகையோருக்கு வாழ்வில் அமைதி எப்படி கிட்டும். மொத்தத்தில் வாழ்வே காய்ந்து போய் விடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget