வில்லியாக களமிறங்கும் மந்த்ரா

தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஒன்பதுல குரு” படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். நீலாம்பரி கேரக்டரை போல் திமிர் பிடித்த வில்லி வேடத்தில் நடிக்கிறார்.