இடுகைகள்

மார்ச் 15, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"பட்டனை தொட்டால் போதும்' உங்கள் தளம் ?

இண்டர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன். இமெயிலா அதற்கு ஒரு பட்டன். பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன். டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன். எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும் பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை. அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்று விடலாம். இண்டர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக் கூடும். இணையத்தில் உலா வர பிரவுசர் இருக்கிறது. அடிக்கடி செல்லும் தளங்களுக்கு உடனடியாக செல்ல புக்மார்கிங் வசதியும் உள்ளது. ஒரு சில பிரவுசர்களில் நாம் தின‌ந்தோறும் பார்வையிடும் தளங்கள் பிரவுசரை இயக்கியதுமே தோன்றி விடும். அவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த பட்டன்கள் என்று நினைக்கக் கூடும். இண்டர்நெட் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து வரும் நிலையில் பெரியவர்களையும் அதில் சங்கமிக்க கைகொடுப்பது தானே சரியாக இருக்கும். ஆனால் எத்தனை பேருக்கு இதற்கான நேரமும் பொறுமையும் இருக்கும் என்று தெரியவில்லை. இந்...

ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன்

நீதி நூல்கள் ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன் ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன. கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை 15. காவல் தானே பாவையர்க்கு அழகு 16. கிட்டாதாயின் வெட்டென மற 17. கீழோர் ஆயினும் தாழ உரை 18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை...

சிக்கன் பிரியாணி

படம்
தேவையான பொருட்கள் கோழி கறி (பெரிய துண்டாக) - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி பட்டை - 5 கிராம்பு - 5 அன்னாசி பூ - 3 மராட்டி மொக்கு - 3 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 2 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி புதினா தழை - 1 கைப்பிடி கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி நெய் - 1 மேஜைக் கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கோழிக்கறி துண்டுகளை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். 2. பெரிய வெங்கயம், பச்சை மிளகாயை தனித்தனியே நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 3. தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஆகிய இரண்டையும் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 5. அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 6. பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும். 7. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, புதினா தழை, கொத்தமல்லி...

சென்னா மசாலா

படம்
சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தற்காலத்தில் அனைவரும் வயது வித்தியாசமின்றி தொட்டுக் கொள்ள விரும்பும் சைடு டிஷ் `சென்னா மசாலா’ அதி அற்புத சுவையை தன்னகத்தே அடக்கி உள்ள சென்னா, புரதம், நார்ச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. குறைந்த கொழுப்புச்சத்துடன் வயிற்றை நிரப்பும் தன்மை வாய்ந்தது. சென்னா மசாலாவுடன் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு சீரகத்தூள் போன்றவற்றை சென்னா உறிஞ்சிக் கொள்வதால் நம் வயிற்றில் சேரக்கூடிய வாயுவை தடுக்கும். சிறப்பு மிகுந்த சென்னா! சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து கையால் நன்கு நசுங்கும் பதத்திற்கு வேக வைப்பது மிக மிக அவசியம். இது சென்னா எளிதில் ஜீரணமாக உதவும். தானிய வகைகளில் மிகுந்த சுவையும், சத்தும் வாய்ந்த சென்னாவை நன்கு ஊறப்போட்டு வேக வைத்து கமகமவென மசாலா கிரேவி செய்து சேர்த்து சுவைத்தால் அதி அற்புதமாக இருக்கும். இம்முறை நாம் சென்னா மசாலா செய்வோமா? சென்னா மசாலா தேவையான பொருட்கள் வெள்ளைச் சென்னா – 2 கப் உப்பு – 1 டீஸ்பூன் எண்ணை – 8 ட...

பார்க்க முடியாத கிரகம்

சூரியக்குடும்பத்தில் உள்ள புதனைத்தான் `பார்க்க முடியாத கிரகம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் `மெர்குரி’ என்று அழைக்கப்படும் புதன், சூரியனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. புதன் குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்… * பூமியின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான், புதனின் விட்டம். அதேபோல பூமியின் மொத்த எடையில் 5.5 சதவீதம் தான் புதனின் எடை. * சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் புதன், சூரியனில் இருந்து சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. * நம்முடைய நாள் (24 மணி நேரம்) கணக்குப்படி 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது, புதன். அதாவது, புதனில் ஒரு வருடம் என்பது நமக்கு 88 நாட்களாகும். * புதன், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. * மெர்குரி என்பது, ரோம் நாட்டிலுள்ள `சந்தனத்தால் ஆன இறக்கைகளைக் கொண்ட தேவதூதனின்’ பெயராகும். * இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரிய ஒளியின் பிரகாசத்துக்கு நடுவே இதைக் காண்பது கடினம். பொதுவாக சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் ...

மிகச் சிறிய பறவை!

உலகிலேயே மிகச் சிறிய பறவை கிபா நாட்டில் உள்ளது. `மெல்லிஸிகா ஹெலனே’ என்ற தேன்சிட்டுதான் அது. அப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். அலகு முதல் வால் வரை அதன் நீளம் 2 அங்குலம். பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை இதுதான். இதில் ஆண் பறவை வேகமாகச் சிறகுகளை அடிக்கும் தன்மை கொண்டது. அது ஒரு வினாடிக்கு 80 தடவைகள் இறக்கையை அடிக்கும். அப்போது `விர்’ என்ற சப்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் தனித்தனியாகவே பறக்கும். இவற்றின் இனச்சேர்க்கை சில வினாடிகளில் முடிந்து விடும். இந்த நேரத்தைத் தவிர மற்ற வேளைகளில் ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று கண்டு கொள்ளாது. இவை சிலந்தியின் வலையைக் கொண்டு மரக்கிளைகளில் மிகச் சிறிய கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இப்பறவை களுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இவற்றின் உணவு. ஆனால் இதற்கு மிகவும் பிடித்த உணவு பூந்தேன்தான். எனவே மலர்களைத் தேடி இவை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பறக்கும்.

சனிக்கிரகத்தின் வளையங்கள்

படம்
சனிக்கிரகத்தைச் சுற்றி அழகான மூன்று வளையங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அவற்றில் வெளிப்புறம் காணப்படும் இரண்டு வளையங்களும் மிகப் பிரகாசத்துடன் திகழ்கின்றன. இவற்றைத் தாண்டி சனியின் மிக அருகாமையில் காணப்படும் உள் வளையம், அவ்வளவு ஒளியுடையது அல்ல. பிரகாசமான இரண்டு வளையங்களையும் 1610-ம் ஆண்டு கலிலியோ என்ற வானவியல் அறிஞர் தான் கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. 1850-ம் ஆண்டு தான் மூன்றாவது வளையம் கண்டுபிடிக்கப்பட்டது. வளையங்களாகத் தெரிபவை, உண்மையில் வளையங்கள் கிடையாது. முன்பு எப்போதோ சனியைச் சுற்றி வந்த உபகிரகம் ஒன்று, சனியை நெருங்கி வரும்போது உடைந்து துகள்களாகி சனியைச் சுற்றி வருகிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த வளையங்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தன என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது. செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம். தற்போதைய ஆய்வுகளின்படி ...

ஜெட் விமானமும், ஹெலிகாப்டரும்

படம்
விமான வேகத்தையும், வசதிகளையும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது, ஜெட் என்ஜின். இதற்கான உரிமம் பிராங் ஒயிட்டில் என்ற பிரிட்டீஷ்காரரால் 1930-ல் பெறப்பட்டது. அது ஏழு ஆண்டுகளுக்குப் பின் சோதிக்கப்பட்டு, அதன்பின்னும் நான்காண்டுகள் கடந்த நிலையில் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து கான்கார்ட், ஜம்போ ஜெட், ஜம்ப் ஜெட் என்று பல விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. லியனார்டோ டாவின்சி 1500-ம் ஆண்டுகளிலேயே ஹெலிகாப்டர் போன்ற ஒரு பறக்கும் சாதனத்தை வடிவமைத்திருந்தார். 1754-ல் ரஷிய அறிவியல் கழகத்தில் ஒரு பெரிய பொம்மை ஹெலிகாப்டர் செயல்விளக்கமாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது. ஆனால் ஒரு மனிதனை அப்படியே மேலே தூக்கிச் சென்று கீழே இறக்கும் சக்தி கொண்ட ஹெலிகாப்டரை 1907-ல் பால் கோர்னு என்ற பிரெஞ்சுக்காரர் உருவாக்கினார். அமெரிக்காவில் பிறந்த ரஷ்யரான இகோர் சிகோர்ஸ்கி அந்த டிசைனை மேம்படுத்தினார். அவர் உருப்படியான, முழுமையான ஹெலிகாப்டரை 1939-ல் பறக்கவிட்டார். எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கிய எடிசன், ஹெலிகாப்டர் என்ஜினை தயாரிக்கவும் முயற்சித்தார். ஆனால் வெடிமருந்தைப் பயன்படுத்தி அந்த ஆராய்ச்சி ச...

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

படம்
`போன்சாய்’ என்பது ஜப்பானிய முறையில் தாவரங்களை வளர்க்கும் முறையாகும். `போன்சாய்’ என்பதற்கு ஜப்பானிய மொழியில் ஒரு மரத்தையோ அல்லது தாவரத்தையோ குட்டையான தொட்டியிலோ அல்லது தட்டிலோ அழகுக்காக வளர்க்கும் பூந்தோட்ட முறை என்று பொருள். இதில் கலையும் அறிவியலும் இணைந்திருப்பதை உணர முடியும். போன்சாய் கலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தோன்றியது. இம்முறையில் செடிகளை வளர்க்க விரும்புகிறவர்கள், பொதுவாக மரத்தன்மை கொண்ட தாவரங் களையே தேர்ந்தெடுப்பார்கள். எடுத்துக்காட்டாக, மா, நாவல், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற பலன் தரக்கூடிய செடி வகைகளையும், அழகுக்காக வளர்க்கக்கூடிய காகிதப் பூச்செடி போன்றவற்றையும் தேர்ந்தெடுப்பார்கள். இம்முறையில் செடிகளை வளர்க்கக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: 10 செ.மீ. உயரத்துக்குக் குறைவான தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், இயற்கை உரம் நிறைந்த மண்ணை இடவும். பிறகு, தாங்கள் விரும்பும் சிறுசெடியை வேருடன் பிடுங்கி, பிரதான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேர்களையும், தண்டின் அடிப்பகுதியில் 3 அல்லது 4 இலைகளை விட்டுவிட்டு மற்ற னி இலைகளையும் வெட்டிவிட வேண்டும்...

மிகச்சிறிய கிரகம்-புளூட்டோ

படம்
சூரியனில் இருந்து ஒன்பதாவதாக அமைந்திருக்கும் கிரகம், புளூட்டோ. இதுதான் சூரியக்குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகமாகும். அதேபோல், சூரியக்குடும்பத்தின் கடைசி எல்லையில் இருக்கும் கிரகமும் இது தான். புளூட்டோவைப் பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம். கண்டுபிடிப்பு சூரியனில் இருந்து எட்டாவதாக அமைந்திருக்கக் கூடிய நெப்டின் கிரகத்திற்கு அப்பால் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்ற உண்மையை எடுத்துரைத்தவர், பெர்சிவல் லோவல். இவர், அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் அறிஞர். செவ்வாய்க் கிரகம் குறித்து பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டவர். இவர் இறந்து (1916) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான் `புளூட்டோ’ கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்தவர், வானியல் ஆராய்ச்சியாளரான கிளைட் டாம்பே. மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும், பெரிய நீள்வட்டம் போட்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இது சூரியனுக்கு 440 கோடி கிலோமீட்டர் அருகாமையிலும், 730 கோடி கிலோமீட்டர் தூரத்திலும் நீள்வட்டம் போடுகிறது. எட்டாவது கிரகம் சில சமயங்களில், நெப்டினின் சுற்றுப்பாதையைத் தாண்டி சூர...

வைரத்தின் வரலாறு

படம்
வைரம்! இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது. வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ? இன்றைக்கு நாம் உபயோக...

அதிசய ஈஸ்டர் தீவு!

படம்
தென் பசிபிக் கடலில் சென்று கொண்டிருந்த டச்சுக் கப்பலின் தலைவர் ஜேக்கப் ராசீவன், ஒரு தீவில் கோட்டை போல காணப்பட்ட சுவரின் மீது 30 அடி உயரமுள்ள ராட்சதர்கள் நிற்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோதுதான் அவை ராட்சதர்கள் அல்ல, சிலைகள் என்பதும், கோட்டைச் சுவர் போலத் தோன்றியது மேடை என்பதும் தெரிந்தன. அந்தச் சிலைகள் நீண்ட காதும், சிவந்த மூக்கும் கொண்டவையாக இருந்தன. மாலுமி ஜேக்கப் அந்தச் சிலைகளைக் கண்டது 1722-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று. எனவே அத்தீவுக்கு `ஈஸ்டர் தீவு’ என்றே பெயரிட்டார். பின்னர் நூறு வருடங்கள் கழிந்த பின்னரே அத்தீவைப் பற்றி பிறர் ஆராயத் தொடங்கினர். அப்போது சிலைகள் நின்றுகொண்டிருக்கவில்லை. அவை தரையில் தாறுமாறாக விழுந்து கிடந்தன. அருகில் உள்ள உறங்கும் எரிமலையில் சிலைகள் செதுக்கப்பட்டு, கீழே கொண்டு வந்து நிறுவப்பட்டிருக்கின்றன. அப்படி 300-க்கும் மேற்பட்ட சிலைகள் காணப்படுகின்றன. இன்னும் பூர்த்தியடையாத 400 சிலைகள், மலையில் உள்ளன. உளிகளும், சுத்தியல்களும் கூட அத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடி உயரம் உள்ளது. முடிக்கப்படாத ஒரு சிலை 66 அடி உயரம...

மரபணு தகவல் புரட்சி!

படம்
பத்து வருடங்களுக்கு முன், அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் விடுத்தக் கூட்டறிக்கையில் மனித ஜீனோமின் மாதிரி வரைவு உருவாக்கப்பட்டதாக அறிவித்தபோது, மரபணு (அ) ஜெனிடிக்ஸ் துறையில் மிகப்பெரிய புரட்சி தொடங்கிவிட்டதை உலகம் உணரத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்வதற்கான ஆராய்ச்சிகள் ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. உயிரியல் ரகசியத்தை அணுவணுவாக தோண்டத் துவங்கி யது விஞ்ஞான உலகம். மிகச் சாதாரணமாக கூறவேண்டு மானால் “நீ யார் என்பதை உன்னுள் தேடு’. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது மரபணு ஆராய்ச்சிகள். ஒவ்வொரு மனிதனின் தனி அடையாளங்களும், உடல் கூறுகளும் பாரம்பரியமாக கிடைக்கப்பெற்றது. கண்களின் நிறம், சருமம், மூக்கு வடிவம். போன்ற எல்லா அம்சங் களும் வழி வழியாக, சந்ததிகளாக தொடருபவை. நாம் எல்லோரும் எண்ணற்ற செல்களினால் ஆக்கப்பட்டிருக்கிறோம். செல் என்பது நுட்பமான, நுண் ணிய உயிரணு. செல்லில் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பதிவு பொதித்து வைக்கப்பட்டுள்ளது. பிறப்பின் ரகசியம் எழுதப்பட்டிருக்கிறது. மொழியில்லாத மொழ...

ஐந்தாண்டு திட்டங்கள்

மறுமொழியவும் இந்தியாவில் திட்டமிடல் முறையில் பல முற்போக் கான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதாரத் திட்டமிடல் என்பது அரசியலும், பொருளாதாரமும் இணைந்த ஓர் இயங்கியல் அணுகு முறையாகும். கடந்த 57 ஆண்டுகளில் திட்டமிடல் முறையில் மாநிலங்களின் பங்கு முதன்மை பெற்று வருகிறது. மாநிலத் திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக 1971-ஆம் ஆண்டில், தமிழ் நாட்டின் சமுதாய, பொருளாதாரத் தளத்தில் திட்டமிடல் கொள்கை புதிய உந்துதலைப் பெற்றது. தமிழ் நாடு பல்வேறு துறைகளில் சீரான வளர்ச்சியை எட்டு வதற்கு இது வழிகோலியது. 1920-ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே தமிழ்நாடு, சமூகநீதிக் கொள்கையைக் கடைப் பிடித்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சி யாக, நாடு விடுதலை அடைந்த பின்னரும், வேளாண்மை, தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்திற்கும், சமுதாய நலத்திட்டங் கள் சிறப்புற நிறைவேறுவதற்கும் தமிழ்நாடு அரசு திட்டங் களைத் தீட்டி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் எளிய மக்கள் பங்கு பெற்றுப் பயனடைவதில்தான் உண்மையான ச...

வைரத்தின் வரலாறு-2

சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ? சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள். விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ? விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள். அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும். பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா? இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும். Indu...

வைரத்தின் வரலாறு-3

விளம்பரங்களில் வைரத்தைப் பற்றி “EF” கலர், “FG” கலர் என்று குறிப்பிடுகிறார்களே, அது என்ன? வைரக்கல் நிறத்தை, ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள். “D” நிறம் மிக உயர்ந்த வெள்ளையை குறிக்கிறது. இந்த நிற வைரம் கிடைப்பது மிக அரிது. “E” “F” “G” ஆகிய நிறங்கள்தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. இவைகளில் வித்தியாசம் அதிகமாக இருக்காது. H,I என்று போகும்போது இன்னும் வெண்மை நன்றாக குறையும். J,K,L என்ற நிறங்கள் சிறிது சிறிதாக மஞ்சளாக ஆரம்பிக்கும். இப்படி `பளிச்` சென்ற தன்மைக்கு தகுந்தபடி “Z” வரை நிறம் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த பெரிய வைரம் கோகினூர் மட்டும்தானா? வேறு வைரங்கள் ஏதேனும் உண்டா ? நிறைய உண்டு. அவை: 1. ரீஜென்ட் (Regent): இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் இது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் பிட் வைரம் (Pit Diamond) . பட்டை தீட்டப்படாத பொழுது இதன் எடை 410 காரட்டுக்கும் மேல். 1700-ல் ஆந்திராவில் கோல்கொண்டாவில் இருந்து 72 கி.மீ. தெற்கில் உள்ள பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இது இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரங்களில் ஒன்று....

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்

படம்
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது? தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும். கி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப் பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தருணத்திலே நாளந்தா பல் கலைக் கழகமானது ஓர் ஆப்கான் தாக்குதலில் பக்தியார் கில்ஜி என்ற கொடூர வெற்றி வீரனால் அழிக்கப்பட்டது. இந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையமாக ஐந்தாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தனது 700 ஆண்டு இருப்பினை முடித்துக் கொண்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பழமை வாய்ந்த பலோக்னா பல்கலைக்கழகத்தோடு...

தட்டச்சு எந்திரம்

படம்
எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப்ரைட்டர்’ என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத்துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன்றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற்காக கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரியப்படுவீங்க! பார்வையற்றவர்களுக்கு உதவுற மாதிரி தான் முதன்முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக அமெரிக்காவுல 1827-ம் ஆண்டு வில்லியம் பர்ட் என்பவர் ஒரு தட்டச்சு எந்திரத்தை உருவாக்கினார். அது `டைப்போகிராபர்’னு அழைக்கப்பட்டுச்சு. ஆனால், அதனுடைய மாதிரி எதுவும் இப்ப கிடையாது. அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தட்டச்சு எந்திரத்தை வடிவமைக்க முயற்சி செஞ்சாங்க. 1873-ம் ஆண்டு அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான தட்டச்சு எந்திரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஷோவ்ஸ், சாமுவேல் சோல், கார்லோஸ் கிளிட்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்களும் சேர்ந்து அதை தயாரிச்சாங்க. அதன்பின்னர் பல்வேறு வசதிகளுடன் தட்டச்சு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. கணினிகளுக்கு முன்னோடியா இதைச் சொல்றாங்க. தற்போது இதன் பயன்பாடுகள் குறைவா இருந்தாலும், கணினியை எளிதா பயன்படுத்த...

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார். அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார். அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு ...

அங்கோர் அதிசய அழிவுகள்

வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன. கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்துமதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்தில் கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிலிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத்...